செய்திகள் :

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: "உசிலம்பட்டிக்கு 'டிக்' அடித்த முதல்வர்" பின்னணி என்ன?

post image

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கப் போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் வைத்து தொடங்கலாமா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாசாரம் அதிகம் நடக்கும் பகுதி இருக்கிறது. இன்றளவும் பெண் வீட்டார் கடன் வாங்கியாவது தங்கள் மகளுக்கு சீர் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதனால் இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் இருந்து துவங்கலாம் என தவெக தலைமை கணக்கு போடுகிறது.

‘தாய் மாமன் தங்க மோதிரம்’

மேலும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பெண் சிசு கொலை அதிகம் நடந்த பகுதியாகவும் உசிலம்பட்டி இருந்தது. இந்த திட்டம் முழுவதும் பெண்களை மையப்படுத்தியே தொடங்கபட உள்ளதால், பெண் சிசு கொலை சம்பந்தமாக விழிப்புணர்வாக பேசினால் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் உசிலம்பட்டியை டிக் அடித்திருக்கிறது தவெக தலைமை. 

 இதனிடையே இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் எங்கு வைத்து தொடங்கலாம் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் நேரில் கலந்து கொள்ளலாமா? அல்லது வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கலாமா? என்பதையும் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

தவெக: ``ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" - முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் நவோதயா ... மேலும் பார்க்க

'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செப்.19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு காரணமாக முப்பெரும் விழா தள்ளி வைக்கப... மேலும் பார்க்க

"ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்றாங்க.!"- தவெகவை சாடிய இபிஎஸ்

சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய அவர், " சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரி... மேலும் பார்க்க

"துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று என்னிடம் கேட்டார்"- ஆதவ் அர்ஜுனா குறித்து எடப்பாடி

சேலத்தில் நேற்று (செப்.19) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதே கூட்டத்தில் அமைச... மேலும் பார்க்க

'பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் ரத்து?' - அமைச்சர் ஆதவ் சூசகம்!

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேலைகளில் தவெக முகாம் மும்முரமடைந்திருக்கிறது. தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்தும் ... மேலும் பார்க்க

'ரிசைன் பண்ணுங்க; கல்லூரி முடித்த இளம்பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிப்போம்!'-எடப்பாடிக்கு ஆதவ் சவால்

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெகவின் முக்கியஸ்தர்கள் அந்த தொகுதியில் முகாமிட்டிருக்கின்றனர். தொகுதியில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக வி... மேலும் பார்க்க