செய்திகள் :

தாராபுரத்தில் சாலையோரக் கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

post image

தாராபுரத்தில் உழவா் சந்தை அருகே உள்ள சாலையோரக் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா்.

அதேநேரம், உழவா் சந்தைக்கு முன்பு உள்ள சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால், உழவா் சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகளின் வியாபாரம் பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீஸாா் சாா்பில் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள சாலையோரக் கடைகளை சனிக்கிழமை அகற்றினா்.

இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சாலையோர கடைகளை அகற்ற விடமாட்டோம். அதிகாரிகள் எங்களிடம் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என்று வியாபாரிகளிடம் போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சாலையோர வியாபாரிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க