செய்திகள் :

திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!

post image

மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர்

திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.30 மணியளவில் ராமநத்தம் அடுத்திருக்கும் எழுத்தூரைக் கடந்து கொண்டிருந்தது.

அப்போது பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடியது. அதற்கடுத்த விநாடி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையைத் தாண்டி, சென்னை – திருச்சி சாலையில் பாய்ந்தது.

விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து

அதே நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களில் மோதிய பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

அப்போது பேருந்தில் இருந்தவர்கள் மரண ஓலத்துடன் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற ஆரம்பித்தனர். நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தில், இரண்டு கார்களும் அப்பளமாக நொறுங்கின.

விபத்தில் சிக்கியவர்கள் எழுப்பிய மரண ஓலங்களால் எழுத்தூர் பகுதியே அதிர்ந்தது. அதைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் இருந்தவர்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்ததே தவிர, நொறுங்கிக் கிடந்த காருக்குள் இருந்தவர்களை மீட்க முடியவில்லை.

குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு

அதனால் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் கார்களுக்குள் இருந்தவர்களில் ஏழு பேர், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். அதையடுத்து மிக மோசமான காயங்களுடன் உயிருடன் இருந்த 5 பேர் மீட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் ஒரு முதியவரும், குழந்தையும் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது.

மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

இரண்டு கார்களில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், மற்ற மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதுடன், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

கார்களின் பதிவெண்களை வைத்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முன்பக்க டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அதற்கான காரணம்தான் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

அரசு, ஓட்டுநர்களின் அலட்சியமே காரணம்

``பேருந்தோ அல்லது காரோ அந்த டயர்களின் அளவுக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால் எந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.

அதிலும் குறிப்பாக இந்த அரசு விரைவுப் பேருந்துகள் (SETC), இரவு நேரங்களில் ரேஸில் செல்வதைப் போல பறக்கின்றன. மேலும் பேருந்துகளின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்காக புதிய டயர்களைப் போடாமல், மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களை (Retreaded Tyres) போடுவதும் இப்படியான விபத்துக்கு காரணம்.

இப்படியான தொழில்நுட்பக் காரணங்களுடன், அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களின் அலட்சியம்தான் அனைத்தையும் விட முக்கியமான காரணம்" என்று குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மருத்துவமனயில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், சிவசங்கரன்

விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்கள் சிவசங்கரன் மற்றும் சி.வெ.கணேசன், விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டனர்.

அப்போது விபத்து குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட அவர்கள், மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் விபத்து குறித்த முழு அறிக்கையையும் கேட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரன் கூறியிருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கர்நாடகா: பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 17 பேர் உயிரிழந்த சோகம்

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியா... மேலும் பார்க்க

'நீர்தேக்கத் தொட்டியை இடித்தபோது, வீட்டில் இடிந்து விழுந்து விபத்து' - கரூர் அதிர்ச்சி சம்பவம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்தி கிராமம், அமர்ஜோதி மூன்றாவது தெருவில் அதிக கொள்ளளவு கொண்ட நீண்ட காலமாக பயனற்று கிடந்த நீர்த்தேக்கத் தொட்டியை நீக்கிவிட்டு, அங்கு அரசு சார்பாக புதிய கட்டடம் கட்ட... மேலும் பார்க்க

திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே விவசாயி பலியான சோகம்!

திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியு... மேலும் பார்க்க

தருமபுரி: தொப்பூரில் பின்னால் வந்த லாரி, முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்து - 4 பேர் பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்ற லாரி, இருசக்கர வாகனம், ஆம்னி வேன், கார் மீது மோதியதில் தம்மணம்பட்டியை சேர்ந்த அருண... மேலும் பார்க்க

உ.பி: 3 கார்கள், 6 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு - பனியால் நேர்ந்த சோகம்

உத்திரபிரதேசம் மதுராவில் உள்ள டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று அதிகாலையில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த பல பேருந்துகள் தீப்பற்றி எரிந்துள்ளன.... மேலும் பார்க்க

கோவா தீ விபத்து: `எப்படியும் போனை எடுத்து பேசுவார்னு நினச்சேன்’ - கணவன், 3 சகோதரிகளை பறிகொடுத்த பெண்

கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிக... மேலும் பார்க்க