செய்திகள் :

"தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.!" - விஜய் பேச்சு குறித்து தமிழிசை

post image

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (மார்ச். 4) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் இன்று விஜய் தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவேன் என்று கூறுவதை விட தம்பி விஜய் முதலில் தனக்கு வரும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், நமக்கு பின்னால் வரும் தொண்டர்களை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து.

தவெக விஜய்
தவெக விஜய்

இன்றைய கூட்டத்தில் எலெக்ஷன், எமோஷன் என்றெல்லாம் பேசியிருந்தார். ஆனால் தமிழ்நாடு புரொமோஷன் அடைய வேண்டும் என்றால் அதற்கு என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.

தம்பி விஜய் இன்றைக்கு பேசியதை பார்த்தேன். நன்றாகத் தான் பேசியிருந்தார். சில கேள்விகள் நியாயமாகக் கேட்டார். மாநில அரசால் முடியாது என்று தெரிந்தும் நீட் விலக்கு என்று ஏன் சொன்னீர்கள்? என்பது உள்ளிட்ட நியாயமான கேள்விகளை கேட்டிருந்தார்.

அதனால் அவர் கேட்ட நியாயமான கேள்விகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம். தமிழ்நாடு அணி, டெல்லி அணி என்று அவர் விளையாட்டாக பேசியதை எல்லாம் தவிர்த்து விடுங்கள். அதுதான் என்னுடைய கருத்து" என்று தெரிவித்திருக்கிறார்.

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டி... மேலும் பார்க்க

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' - பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால், 27 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா இடங்கள் மட்டுமே தர ... மேலும் பார்க்க

ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் போரில், ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவும் ஈரான்... மேலும் பார்க்க

பீகார்: முதல்வர் பதவியை துறக்கிறாரா நிதிஷ் குமார்? - துணை முதல்வராகும் வாரிசு? - என்ன நடக்கிறது?

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டது. அரசியல் நிபுணர்களால் 'நிதிஷ் குமார் இந்த தேர்தலில்... மேலும் பார்க்க

"இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!"- தமிழிசைக்கு சு.வெ பதில்

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்ற... மேலும் பார்க்க