செய்திகள் :

திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபட்டார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டாா். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார். அவரது செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டினர்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை(ஜன.11) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அரசு தயாரித்துத் தரும் உரையை வாசிக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அரசியல் உள்நோக்கத்தோடு அவமதிப்பதும் ஆளுநருக்கு இழுக்கு. திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபடுகிறார். என்று ஆளுநர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என தெரிகிறது. மேலும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

விடியல் அரசு

விடியல் பயண திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்றவற்றை சுட்டிக் காட்டி இவற்றை எல்லாம் அனுபவிக்கும் மக்கள் தான் விடியல் அரசின் சாட்சி. அவர்களுக்காகத் தான் விடியல் அரசே தவிர இருளில் இருக்கும் எதிர்க்கட்சிகளுகாக அல்ல என்றார்.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை

சட்டம்-ஒழுங்கு மாநிலத்தில் சீராக இருப்பதாகவும், 3 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், இன்னும் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் கருணை இருந்தாலும் அதற்கான நிதி இல்லை என்று மாநில நிதி நிலைமை குறித்து பேசினரா.

அதிமுகவினர் கருப்புச்சட்டை

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை, புதிய கல்விக் கொள்கை, யுஜிசி விதிகள் திருத்தத்தால் கல்வியை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, சட்டப்பேரவையின் மாண்பை சிதைத்த ஆளுநரை எதிர்த்து கருப்புச் சட்டை போராட்டம் நடத்தியிருந்தால் பாராட்டி, வரவேற்றிருப்பேன், அதைவிடுத்து இவர்கள் கருப்புச் சட்டை போராட்டம் நடத்திய காரணம் சிரிப்பு வரவழைக்கிறது என தெரிவித்தார்.

டங்க்ஸ்டன் திட்டம் வராது

டங்க்ஸ்டன் திட்டம் தமிழகத்தில் வராது. மீறி வந்தால் நான் முதல்வர் பதவியிலேயே இருக்க மாட்டேன் என்று ஏற்கெனவே சட்டப்பேரவையில் கூறியிருந்தேன். அதையும் மீறி சிலர் இதில் அரசியல் செய்து குளிர் காய நினைக்கிறார்கள் என்றார்.

ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடலை தோண்டியெடுப்பது தற்காலிகமாக நிறுத்தம்!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெய்யத்திங்கராப் பகுதியின் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 50 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோதமாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பிரண் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் காவ... மேலும் பார்க்க

மனைவியைத் துன்புறுத்தியவர் திட்டமிட்டு கொலை! விசாரணையில் திருப்பம்!

மகாராஷ்டிரம், தானேயில் தன் மனைவியைத் துன்புறுத்தியவரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்,கடந்த ஜன.11 சுகந்த் ஷத்ருகனா பரிதா (29) என்பவர் நரேஷ் ஷம்பு பகத் வீட்டில் உயிரிழந... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் "முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக... மேலும் பார்க்க

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1452.97 கி.மீ. நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு ... மேலும் பார்க்க

தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நடிகர் விஜய், ”பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் ... மேலும் பார்க்க