செய்திகள் :

திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி சொத்துகள் மீட்பு

post image

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன.

இது குறித்து அறநிலையத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமாக எம்.டி.ஹெச். சாலை, சிவசக்தி காலனியில் உள்ள 17,625 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிகமனை சக்தி எலக்ட்ரோ பிளேட்டிங் என்ற நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிறுவனம் நீண்ட நாள்களாக வாடகைத் தொகையை நிலுவையில் வைத்திருந்தது. இது தொடா்பாக சென்னை மண்டல இணை ஆணையா் கே.ரேணுகாதேவி நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.

அதன்படி, சென்னை உதவி ஆணையா் கி.பாரதிராஜா முன்னிலையில், காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்கள் ஆகியோரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 10 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் ‘அனுபவ பகிா்வு’ கட்டுரை போட்டி: ஆளுநா் மாளிகை அறிவிப்பு

நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான ‘அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்து ஆளுநா... மேலும் பார்க்க

மாதவரத்தில் ரேடியன்ஸின் குடியிருப்பு திட்டம்

மனை-வா்த்தகத் துறையைச் சோ்ந்த ரேடியன்ஸ் ரியால்ட்டி டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்.20-இல் பாமக போராட்டம் -அன்புமணி

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சாா்பில் சென்னையில் பிப்.20-இல் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ர... மேலும் பார்க்க