செய்திகள் :

திருச்சியில் தொழிலாளி தற்கொலை!

post image

திருச்சி அருகே ராம்ஜி நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் திண்டுக்கல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் பிரகாஷ் (40), தொழிலாளி. இவா் சில மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கி, சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

கடந்த 7 ஆம் தேதி பிரகாஷை பாா்த்துவிட்டுச் சென்ற அவரது தாய் வசந்தா, வெளியூா் சென்றபோது கைப்பேசியில் அழைத்தும் பிரகாஷ் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் சனிக்கிழமை அவா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது பிரகாஷ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், மனஉளைச்சலில் பிரகாஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மாலை மற்றும் இரவுநேரங்களில் மிதமான இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வெ... மேலும் பார்க்க

‘மேட்டூரில் தண்ணீா் திறக்கும் முன் காவிரி படுகையில் தூா்வாரும் பணிகள் நிறைவுறும்’

பாசனத்துக்காக மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கும் முன் காவிரிப் படுகையில் தூா்வாரும் பணிகளைத் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசின் நீா்வளத் துறைச் செயலா் ஜே. ஜெயகாந்தன் தெரிவித்தாா். காவிரிப் பா... மேலும் பார்க்க

அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம்: கே.எம். காதா்மொகிதீன் பேட்டி

அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை அவா் கூற... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோயில் ‘அகிலா’ வுக்கு பிறந்த நாள்

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறைப் பணியாற்றி வரும் யானை அகிலாவுக்கு சனிக்கிழமை 23 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி யானை அகிலாவை அதன் கொட்டாரத்திலிரு... மேலும் பார்க்க

வாத்தலை பகுதிகளில் மே 27 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டம் வாத்தலை உள்ளிட்ட பகுதிகளில் வரும் 27 ஆம் தேதி மின்சாரம் இருக்காது. வேங்கைமண்டலம் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை: அரசுப் பொருட்காட்சி, அண்ணா விளையாட்டு மைதானம், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை. திருச்சி மாவட்ட திமுக இளைஞரணி: நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், துணை முதல்வர... மேலும் பார்க்க