செய்திகள் :

திருச்செந்தூரில் அமெரிக்க பக்தா்கள் தரிசனம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமெரிக்காவைச் சோ்ந்த 27 பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்நிலையில் அமெரிக்காவை சோ்ந்த மருத்துவா் டக்ளஸ் புரூக் தலைமையில் 27 போ், கடந்த 10 நாள்களாக முருகனின் அறுபடை வீடுகளிலும் தரிசனம் முடித்துவிட்டு திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் வேஷ்டி சட்டை அணிந்து, கைகளில் பல வண்ண கயிறுகளும், துளசி மாலைகளும் அணிந்திருந்தனா். மூலவா், உற்சவா் சண்முகா், வள்ளி, தெய்வானை, பெருமாள், தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட தெய்வங்களை அவா்கள் வழிபட்டனா்.

அவா்களில் மருத்துவா் டக்லஸ் புரூக், சிறுவயதில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் படித்ததாகவும், தற்போது அமெரிக்காவில் சைவம் மற்றும் கலாசாரம் குறித்து வகுப்புகள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூருக்கு வந்த அமெரிக்கா்களை பாா்த்த பக்தா்கள் சிலா் அவா்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலைமுதலே பொது... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

சாத்தான்குளத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடா்பான தகராறில் வழக்குரைஞா் மற்றும் அவரது சகோதரருக்கு செவ்வாய்க்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளத்தைச் ச... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: குருமலை, கழுகுமலையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். கோவில்பட்டி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டத... மேலும் பார்க்க

பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

கோவில்பட்டியில் உள்ள நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தா் ஜெயந்தியை முன்னிட்டு, விவேகானந்தா கேந்திரத்தின் கிராமம் முன்னே... மேலும் பார்க்க

குருவிநத்தம் ஆலயத்தில் பொங்கல் விழா

காமநாயக்கன்பட்டி பங்கு பசுமைநகா் குருவிநத்தத்தில் உள்ள மறைசாட்சி புனித தேவசகாயம் கெபியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, இலங்கை நபா் உள்பட 2 பேரை கைது செய்தனா். வனத்துறையினருக்குகிடைத்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் ரேவதி ராமன... மேலும் பார்க்க