செய்திகள் :

2026 பட்டதாரிகளுக்கு சிறப்பு உதவித்தொகையை அறிவித்த வெராண்டா பையர்!

post image

வெராண்டா லெர்னிங் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறைக்கான திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவான வெராண்டா பையர், 2026 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்காக சிறப்பு உதவித்தொகை (Scholarship) திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம், தொழில்துறையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அதன் Live Online Banking Career Program-ஐ மாணவர்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் பயில முடியும்.

வெராண்டா பையர்
வெராண்டா பையர்

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான 2026 பட்டதாரிகள் வழக்கமாக ரூ.60,000 கட்டணமுள்ள ஆன்லைன் படிப்பில் வெறும் ரூ.15,000-க்கும், ரூ.75,500 கட்டணமுள்ள சென்னை நேரடி வகுப்புகளில் ரூ.20,000-க்கும் சேர முடியும்.

வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் வேலைவாய்ப்பிற்குத் தேவையான நடைமுறை அறிவு, தகவல் தொடர்புத் திறன் மற்றும் துறைசார் நிபுணத்துவத்தை வழங்கும் வகையில், இப்பயிற்சித் திட்டம் தொழில்துறை வல்லுநர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெராண்டா பையர், முன்னணி BFSI நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. 2026 மார்ச் மாதம் வரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதில் Equitas Small Finance Bank, City Union Bank, HDB Financial Services, Jana Small Finance Bank, RBL Bank, Axis Bank உள்ளிட்ட பல முன்னணி நிதி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த முயற்சி குறித்து வெராண்டா பையர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவின் மேனன் கூறுகையில், "திறமை இருந்தும் பொருளாதாரக் காரணங்களால் தொழில்முகப் பயிற்சிகளைப் பெற முடியாமல் பல பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கான அந்தத் தடையை நீக்குவதற்காகவே இந்த உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். உயர்தர தொழில்துறைப் பயிற்சியுடன், அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளையும் மாணவர்கள் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திறன்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், BFSI துறையில் வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்"

வெராண்டா பையர்
வெராண்டா பையர்

இந்த சிறப்பு உதவித்தொகை சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற தகுதியான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள், தகுதிகள் மற்றும் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு வெராண்டா பையர்-ன் அதிகாரப்பூர்வ தளங்கள் அல்லது சேர்க்கைப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.

வெராண்டா லெர்னிங்

2018 ஆம் ஆண்டு கல்பாத்தி AGS குழுமத்தால் தொடங்கப்பட்ட வெராண்டா லெர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட், இன்று இந்தியாவின் முன்னணி பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, போட்டித் தேர்வு பயிற்சி, வெளிநாட்டு உயர்கல்வி மற்றும் மென்பொருள் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பம், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவம் மூலம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வெராண்டா தொடர்ந்து பங்களித்து வருகிறது.

மேலும் தகவல்களுக்கு, www.verandalearning.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

"பள்ளி முதல் கல்லூரி வரை" - மாணவர்களுக்கு கரம் கொடுக்கும் அமெரிக்க வாழ் தமிழர்களின் அறக்கட்டளை

அமெரிக்க வாழ் தமிழர்களால் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’, தமிழகத்தின் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் உன்னத நோக்குடன் செயல்பட்டு... மேலும் பார்க்க

ஒடிசா: 5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்; வலுக்கும் கண்டங்கள்!

ஒடிசா மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பாடப் புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-இல் வெளியான 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படத்தின் பிரபலமான 'நிம்புடா நிம்புடா' பாடல் இடம்பெற... மேலும் பார்க்க

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி; கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார்

சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.தமிழ்நாட... மேலும் பார்க்க

குரூப் 1: வெறும் 26 பணியிடங்களை அறிவித்த TNPSC; தேர்வர்கள் சந்திக்கும் விளைவுகள் என்ன?

தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற உயரிய அரசுப் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. இந்த உயர் பதவிகளில் பெரும்பாலா... மேலும் பார்க்க

"செங்கோட்டையனின் அறிவிப்பு, சாதி வெறிக் கூட்டத்திற்கு தீனி" - பிரின்ஸ் கஜேந்திர பாபு காட்டம்

"பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது சமூக இழுக்கை சுமந்துகொண்டு திரிய வேண்டிய அவசியத்தை உருவாக்குவது ஆகும்" என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாப... மேலும் பார்க்க

'2029-க்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி'- அசோக் லேலண்ட் அறக்கட்டளையின் சிறப்பான முன்னெடுப்பு!

2029-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்களை தனது கல்வி முயற்சிகள் மூலம் சென்றடைய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு பிரிவாக செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் அறக்கட்டளையானது த... மேலும் பார்க்க