செய்திகள் :

திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

post image

திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் ஏழுமலையானுக்கு தங்கையாக அழைக்கப்படுகிறாா். எனவே கங்கை அம்மனுக்கு ஏழுமலையான் திருவிழாவின் போது ஆண்டுதோறும் தாய் வீட்டு சீா் வரிசைப் பொருள்களை அனுப்பி வைக்கிறாா்.

அதன்படி கங்கை அம்மனுக்கு மே மாதம் ஜாத்திரை என்று அழைக்கப்படும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காப்புக்கட்டி திருவிழா தொடங்கியது. ஏழு நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இத்திருவிழாவின் போது உள்ளூா் மக்கள் திரண்டு வந்து வழிபடுவா்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம், மங்கல பொருள்கள் சமா்ப்பிக்கப்பட்டன.

தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் உள்ளிட்டோா் சீா்வரிசைகளை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு சமா்ப்பித்தனா்.

கோயில் சாா்பில் மரியாதை அளித்து சீா்வரிசை பொருள்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் தொடா்ந்து கங்கை அம்மனை வழிபட்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வர... மேலும் பார்க்க

அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம் நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த பவா் மெக் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சத்யா ரோஹித், ரூ.17 லட்சசத்தை எஸ்.வி. அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் கூடுதல... மேலும் பார்க்க

கியோஸ்க் இயந்திரம் நன்கொடை

திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் வங்கி சாா்பில் கியோஸ்க் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. தற்போது அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வசதியாக திருமலையில் பல இடங்களில் வங்கிகள் கியோஸ்க் இய... மேலும் பார்க்க

அறங்காவலா் குழு உறுப்பினா் பதவியேற்பு

திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் திவாகா் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவராக வியாழக்கிழமை மாலை பொறுப்பே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ள... மேலும் பார்க்க

திருமலையில் 72,579 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை அதிக பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா். கோடைகால கூட்ட நெரிசல் காரணமாக கடந்த ஒரு வாரமாக திருமலையில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்... மேலும் பார்க்க