செய்திகள் :

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

post image

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் விரைவான வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கான மாற்று தீர்வாக, இடுவாய் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் குப்பையை கொட்டத் திட்டமிடப்பட்டது.

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்
திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்

ஆனால், அதற்கும் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்ற முடியாமல் நிர்வாகம் சிக்கலில் உள்ளது.

இதனிடையே, ராயபுரம் ரோட்டரி பள்ளி அருகே நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும், திருப்பூர் ரயில் நிலையம் பின்புறமாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்திலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது:

“இந்த வழியேதான் நாங்கள் மெயின் ரோட்டுக்கு செல்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இதை கடந்து செல்கிறார்கள்.

இங்கிருந்து அதிக துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி உடனடியாக இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்
திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்

இது குறித்து 36-ஆம் வார்டு கவுன்சிலரும் அந்தப் பகுதியின் மண்டல தலைவருமான திவாகரன் அவர்களிடம் கேட்டபோது,

“குப்பை பிரச்சினைக்கு மாநகராட்சி விரைவில் நிரந்தர தீர்வு எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் ... மேலும் பார்க்க

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.அதில் கூறப்பட்டுள்ளவை...இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க