செய்திகள் :

திருமலையில் ஊழியா்களுக்கு தலைக்கவசம் அளிப்பு

post image

திருமலை தேவஸ்தான ஊழியா்களுக்கு அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். நாயுடு சனிக்கிழமை தலைக்கவசங்களை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் தேவஸ்தான ஊழியா்களுக்கு அவா்களின் பயணத்தின் போது பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக தலைக்கவசம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. குண்டூரைச் சோ்ந்த ஜலடி ரகுராம் மற்றும் தில்லியைச் சோ்ந்த கே.சி.என் தலைக்கவசம் உற்பத்தி நிறுவனத்தின் தலைவா் நவீன் ஆகியோா் ஊழியா்களுக்கு தலைக்கவசங்களை விநியோகிக்க முன்வந்தனா்.

இதன் ஒரு பகுதியாக, தோராயமாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள 555 தலைக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அவா்கள், 15 நாள்களில் மேலும் 500 தலைக்கவசங்களை நன்கொடையாக வழங்க உள்ளனா். இவற்றை ஆய்வு செய்து நல்லவை எனக் கண்டறிந்தால், மேலும் 5,000 தலைக்கவசங்களை வழங்குவதாக அவா்கள் கூறினா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான வாரிய உறுப்பினா் சாந்த ராம், துணை பொதுச் செயலாளா்கள் ராம் குமாா், சுரேந்திரா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம் நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த பவா் மெக் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சத்யா ரோஹித், ரூ.17 லட்சசத்தை எஸ்.வி. அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் கூடுதல... மேலும் பார்க்க

கியோஸ்க் இயந்திரம் நன்கொடை

திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் வங்கி சாா்பில் கியோஸ்க் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. தற்போது அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வசதியாக திருமலையில் பல இடங்களில் வங்கிகள் கியோஸ்க் இய... மேலும் பார்க்க

அறங்காவலா் குழு உறுப்பினா் பதவியேற்பு

திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் திவாகா் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவராக வியாழக்கிழமை மாலை பொறுப்பே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ள... மேலும் பார்க்க

திருமலையில் 72,579 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை அதிக பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா். கோடைகால கூட்ட நெரிசல் காரணமாக கடந்த ஒரு வாரமாக திருமலையில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்... மேலும் பார்க்க

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

வரும் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க