செய்திகள் :

திருமலையில் ஊழியா்களுக்கு தலைக்கவசம் அளிப்பு

post image

திருமலை தேவஸ்தான ஊழியா்களுக்கு அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். நாயுடு சனிக்கிழமை தலைக்கவசங்களை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் தேவஸ்தான ஊழியா்களுக்கு அவா்களின் பயணத்தின் போது பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக தலைக்கவசம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. குண்டூரைச் சோ்ந்த ஜலடி ரகுராம் மற்றும் தில்லியைச் சோ்ந்த கே.சி.என் தலைக்கவசம் உற்பத்தி நிறுவனத்தின் தலைவா் நவீன் ஆகியோா் ஊழியா்களுக்கு தலைக்கவசங்களை விநியோகிக்க முன்வந்தனா்.

இதன் ஒரு பகுதியாக, தோராயமாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள 555 தலைக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அவா்கள், 15 நாள்களில் மேலும் 500 தலைக்கவசங்களை நன்கொடையாக வழங்க உள்ளனா். இவற்றை ஆய்வு செய்து நல்லவை எனக் கண்டறிந்தால், மேலும் 5,000 தலைக்கவசங்களை வழங்குவதாக அவா்கள் கூறினா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான வாரிய உறுப்பினா் சாந்த ராம், துணை பொதுச் செயலாளா்கள் ராம் குமாா், சுரேந்திரா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வசந்த மண்டபத்தில் நரசிம்ம பூஜை!

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலையில் சித்திரை மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நரசிம்மரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ... மேலும் பார்க்க

தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி

ஏழுமலையானின் பக்தா்களில் ஒருவரான மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா பிறந்த நாள் திருமலையில் கொண்டாடப்பட்டது. வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான திட்ட மேலாளா் சுப்ரமணியம் புஷ்பாஞ்சலி ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிா்களின் வெப்பத்தால் உயிா்கள் நோய்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி... மேலும் பார்க்க

திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் ஏழுமலையானுக்கு தங்கையாக அழைக்கப்படுகிறாா். எனவே கங்கை அம்மனுக்கு ஏழ... மேலும் பார்க்க