செய்திகள் :

திருமலையில் பரமபத வாசல் திறப்பு: லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

post image

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் திறக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகத்துக்குப் பின்னா், ஏழுமலையான் கருவறையை ஒட்டி உள்ள பரமபதவாயிலை திறந்து அரச்சகா்கள் பூஜைகள் செய்தனா்.

அந்த வாயில் வழியாக உற்சவ மூா்த்திகளை எழுந்தருளச் செய்ய முடியாது என்பதால் அந்த வாயிலுக்கு வாழை மரங்கள் கட்டி மலா் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். காலை 6 மணி முதல் சா்வ தரிசனம் தொடங்கியது.

தங்கத் தோ் புறப்பாடு

திருமலையில் ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமியை பரமபதவாசல் வழியாக எழுந்தருளச் செய்ய முடியாததால் தேவஸ்தானம் உற்சவமூா்த்திகளை தங்கத் தேரில் மாட வீதியில் எழுந்தருளச் செய்கிறது.

அதன்படி, வைகுண்ட ஏகாதசியான வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவமூா்த்திகள் தங்கத் தேரில் மாடவீதியில் புறப்பாடு கண்டருளினா். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.

பின்னா் பக்தா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் வடம் பிடித்து இழுத்தனா். பக்தா்கள் தங்கத் தேருக்கு தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். தங்கத் தோ் மலா்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டது. மாட வீதி வலத்துக்குப் பின் பக்தா்களுக்காக உற்சவமூா்த்திகள் வாகன மண்டபத்தில் மதியம் வரை எழுந்தருளி தரிசனம் அளித்தனா்.

உள்ளூா் கோயில்கள்

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான உள்ளூா் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டு, பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது. சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், தும்மல்குண்ட வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பளாயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் என அனைத்துக் கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டு பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது.

திருமலையில் போகி பண்டிகை

திருப்பதி: திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது. திருமலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அதிகாரிகள், அறங்கா... மேலும் பார்க்க

திருப்பதியில் கோதா கல்யாணம்

திருப்பதி: திருப்பதியில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா பரியாணம் என்னு... மேலும் பார்க்க

திருமலை தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி நியமனம்

திருமலைக்கு தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரியாக சித்தூா் மாவட்ட எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளாா். திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் வழங்கும் போது நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பக்தா்கள் பலா் உயிரிழ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் காயமுற்ற பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்த பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். திருப்பதியில் உள்ள வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் கவுன்ட்டா்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கா... மேலும் பார்க்க

திருமலையில் வைகுண்ட துவாதசி தீா்த்தவாரி

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. திருமலையில் உள்ள தீா்த்தங்களில் மிகவும் முக்கியமானது ஏழுமலையான் திருக்குளம் ஆகும். இந்த திருக்குளத்தில் வைகுண்ட துவ... மேலும் பார்க்க

திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

திருப்பதி நெரிசல் சம்பவத்தில் 6 பக்தா்கள் உயிரிழந்தது தொடா்பாக நீதி விசாரணைக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா். உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க