செய்திகள் :

``ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவர்தான்; ஆனால்..." - ல.ஜ.க-விலிருந்து விலகியது குறித்து தாடி பாலாஜி

post image

தேர்தலுக்கு முன் லட்சிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி, தற்போது அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் திமுக அனுதாபி எனச் சொன்னார்கள். விஜய் கட்சி தொடங்கிய போது அவரது பெயரையெல்லாம் பச்சை குத்தினார். ஆனாலும் அங்கு என்ன சிக்கல்களை எதிர்கொண்டாரோ தெரியவில்லை, திடீரென சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய 'லட்சிய ஜனநாயகக் கட்சி'யில் போய் சேர்ந்தார்.

கட்சியில் அவருக்கு மாநில அளவிலான பொறுப்பையும் வழங்கினார் சார்லஸ்.

இந்தச் சூழலில் அங்கிருந்தும் வெளியேறி இருக்கிற நிலையில், 'என்ன நடந்தது' என பாலாஜியையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

தாடி பாலாஜி

''தமிழருவி மணியன் சார் கொஞ்ச நாள் முன்னாடி அவரு கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைச்சப்ப 'பிரமாண்ட இணைப்பு'னு அதைக் கலாய்ச்சு சோஷியல் மீடியாவுல கமென்ட்டுகள் பறந்தன.. அந்த ரேஞ்சுக்கு என்னையும் கலாய்ச்சிருக்கிறதா நண்பர்கள் சிலர் சொன்னாங்க. நானே ஒரு காமெடி நடிகன். என்னை வச்சு காமெடியா? அப்படியே ஃபீல் ஆகி உட்கார்ந்துடுவேன் பாருங்க‌" என்றவரிடம், 'சரி விஷயத்துக்கு வாங்க' என்றோம்.

``புதுச்சேரியை மையமாக் கொண்டு அவர் தொடங்கின கட்சிக்கு விருப்பப் பட்டுதான் போனேன். போனதும் எனக்கு பொறுப்பும் அறிவிச்சார். அவர் நல்ல மனுஷந்தான். ஆனா என்னனு தெரியல, புதுசா ஒருத்தர் கட்சிக்கு வந்துட்டா பழைய ஆளுக்கு மரியாதை குறைஞ்சிடுது. அவரா அப்படி நடந்துக்கிடுறாரா அல்லது சுத்தி இருக்கிறவங்க அவரை அப்படி வழி நடத்துறாங்களா தெரியல. லட்சிய ஜனநாயகக் கட்சினு பேர் வச்சிருக்கார். என்ன லட்சியம்னும் தெரியல. ஜனநாயகமும் இல்லைனு தெரிஞ்ச பிறகு அங்க இருக்கிறதுல என்ன பிரயோஜனம்?

பல பேரை கட்சியில் சேர்த்தார். திடீர்னு சேர்த்தவங்களை அவராகவே கட்சியை விட்டு நீக்கினார். காரணம் அவருக்கே வெளிச்சம். எதுக்கு வம்புன்னு நானே வெளியில போயிடுறேன்னு முறைப்படி ராஜினாமா கடிதம் அனுப்பிட்டு வெளியில வந்துட்டேன்" என்றார்.

``48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்..."- முதல்வர் விஜய்யை சாடும் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்த... மேலும் பார்க்க

'காலி சேர்கள்... பாதியில் கலைந்த கூட்டம்.!' - தவெகவின் மதுராந்தக இணைப்பு விழா சொதப்பியதா?

மதுராந்தகத்தில் நேற்று மாற்றுக்கட்சியினரின் மாபெரும் இணைப்பு விழாவை நடத்தியிருந்தது தவெக. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் தலைமையில் நடந்த ... மேலும் பார்க்க

`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - அண்ணாமலை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ந்து சட்ட ஒழுங்கு சிக்கல்கள் நீடிப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆரவலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் விஜய் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை அ... மேலும் பார்க்க

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க