செய்திகள் :

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் 40 பவுன் தங்கம்,10 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

post image

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் 40 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம் ஆனந்த் (67). இவா், தமிழ் திரைப்பட விநியோகிஸ்தராக உள்ளாா். பிரேம் ஆனந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனது மகள் துா்கா தேவி வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பிரேம் ஆனந்த் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைப் பாா்த்த பக்கத்து வீட்டுக்காரா் மகேஷ்குமாா், பிரேம் ஆனந்த் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அங்கு விரைந்து வந்த பிரேம் ஆனந்த் குடும்பத்தினா் வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அப்போது பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க