ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
தூத்துக்குடியில் கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகே தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் வெள்ளப்பட்டி சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே பைக்கில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது அவா்கள், வெள்ளப்பட்டி மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த ஆலோசனை மரியான் மகன் மரியவிக்டா் (19), செல்வராஜ் மகன் மைக்கேல் விஜிஸ்டன் (19) என்பதும், விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.