செய்திகள் :

நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

post image

போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர்.

நேற்று தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வேறு தொடங்கியது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே காக்ரோச் ஜனதா கட்சியின் பேரணி, நாடாளுமன்றத்திற்குள்ளே எதிர்க்கட்சிகளின் அமளி என நேற்று மத்திய அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா
cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

இருதரப்பின் கோரிக்கையுமே ஒன்று தான் - நீட் உள்ளிட்ட தேர்வுகளின் முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்... மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

காக்ரோச் ஜனதா கட்சியின் பேரணியை லத்தி சார்ஜ் மூலமும், எதிர்க்கட்சிகளின் அமளியை சபை ஒத்திவைப்பு மூலமும் எதிர்கொண்டது மத்திய அரசு.

மேலும், காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தங்களது கோரிக்கையை கொடுத்தனர். போராட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு, போராட்டத் தரப்பு இருவருக்கும் இடையே நடந்த முதல் பேச்சுவார்த்தை இது தான்.

முக்கியமாக, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - தர்மேந்திர பிரதான் சந்திப்பு நடந்துள்ளது.

கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பு எதற்காக நடந்தது... சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெ என்கிற கோரிக்கை வலுத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது கவனம் பெறுகிறது.

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க