செய்திகள் :

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

post image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள தவெக மகளிர் அணி நிர்வாகி வீட்டில் பெண் நிர்வாகியுடன் தனிமையில் இருந்துள்ளார் செந்தில்நாதன்.

தகவல் அறிந்து வந்த பெண்ணின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும், பெண் நிர்வாகியும் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

மேலும், செந்தில்நாதன் மற்றும் தவெக பெண் நிர்வாகி இருவரையும் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, தவெகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தவெக கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில்நாதனை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கம் செய்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

தவெக மாவட்டச் செயலாளர் ஒருவர் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு.இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்... மேலும் பார்க்க

"கலைஞர் காலத்தில் கூட்டணியில் இருந்தபோதும் கட்டுப்படாமல் இயங்கியிருக்கிறேன்" - திருமாவளவன் பேச்சு

மதுரையில் எவிடென்ஸ் கதிர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றும்போது, "வலதுசாரி அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருவது கவலை அளிக்கிறது. தே... மேலும் பார்க்க

"காங்கிரஸுக்கு காவடி எடுத்தாலும் விஜய் முதல்வராக முடியாது; பாஜக கூட்டணிக்கு வாங்க" - தமிழருவி மணியன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், "காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால... மேலும் பார்க்க