செய்திகள் :

நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு

post image

நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தொழிலாளா் நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகா் தின மாநாட்டில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, பொது மக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை வரும் ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்தாா்.

முதல்வரின் அறிவிப்புக்கிணங்க, பொது மக்களின் நலன் கருதி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை பணியமா்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் அவற்றை இயக்கிக் கொள்ளலாம். இந்த உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையில், ஜூன் 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் வணிகா்களும், பொது மக்களும் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துவரி விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் கே.என் நேரு பதில்

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு ... மேலும் பார்க்க

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு: இபிஎஸ் கண்டனம்

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓட்டு வீடுகளுக்கு சொத்துவரி உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்கள... மேலும் பார்க்க

கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரியில் கனமழை எச்சரிக்கையால் பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான ச... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 92% அதிக மழை!

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் அமுதா கூறுகையில், ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வழங்க வேண்டும் என நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத... மேலும் பார்க்க