செய்திகள் :

நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடி: மத்திய அரசு வழங்க ஜாா்க்கண்ட் முதல்வா் வலியுறுத்தல்

post image

ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகள், கோல் இந்தியா நிறுவன உயரதிகாரிகள், ஜாா்க்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனா்.

அப்போது, மத்திய அரசு ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு தராமல் பாக்கி வைத்துள்ள நிலக்கரிக்கான நிலுவை ரூ.1.36 லட்சம் கோடியை விடுவிக்க வேண்டும் என்று ஹேமந்த் சோரன் வலியுறுத்தினாா். இதனைப் பரிசீலித்து விரைவில் முடிவெடுப்பதாக அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

இது தவிர நிலக்கரி எடுக்கப்பட்ட பிறகு மத்திய அரசு நிலக்கரி நிறுவனங்களால் கைவிடப்படும் நிலங்களை மாநில அரசிடம் உடனடியாக முறைப்படி ஒப்படைக்க வேண்டும். ஏனெனில், கைவிடப்பட்ட சுரங்கங்களில் சிலா் சட்டவிரோதமாக மீண்டும் நிலக்கரி எடுக்க முயலுகின்றனா். இது உயிரிழப்புகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும் வழி வகுக்கிறது.

நிலக்கரி சுரங்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோல் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தை கொல்கத்தாவில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் சோரன் வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய பாஜக அரசு நிலக்கரி நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிப்பதாக சோரன் குற்றம்சாட்டினாா். தோ்தலில் சோரன் வெற்றி பெற்று முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா்.

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 4... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவகாரத்தில் பிரதமா் சூசகம்!

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்... மேலும் பார்க்க

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெர... மேலும் பார்க்க

கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு!

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வ... மேலும் பார்க்க