செய்திகள் :

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

post image

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.

வீட்டுக்குள் கார் நிறுத்த இடவசதி இல்லாததால், இரவு நேரத்தில் வீட்டின் முன்பகுதியில் தெருவிலேயே காரை நிறுத்துவது வழக்கம். அதன்படி காரை பார்க்கிங் செய்து விட்டுச் சென்ற அவர், காலையில் பார்த்தபோது காரை காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று இளைஞர்கள், காரை திருடிச் செல்வது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்கள், டவுன் பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் (22), விளாகம் முத்துராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த பாலசதீஷ் (20), டவுன் அண்ணா தெருவில் வசிக்கும் முத்துராஜ் (21) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மூவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸ் விசாரணையின்போது மூவரும் காரை எடுத்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அத்துடன், தாங்கள் காரைத் திருட வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லவில்லை எனத் தெரிவித்தனர்.

கைதானவர்கள்

சூர்ய சரவணன், காருக்குள் மது பாட்டில்களை வைத்திருப்பது தங்களுக்குத் தெரியும் என்பதால், காரின் கதவு கண்ணாடியை உடைத்து, உள்ளே இருக்கும் பாட்டில்களை எடுக்கச் சென்றபோது, காரின் சாவியை அவர் மறந்து விட்டுச் சென்றதைப் பார்த்ததால் காரையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.

காட்டுப் பகுதிக்குச் சென்று மது குடித்ததும் மூவருக்கும் போதை தலைகேறியதால் அங்கேயே சிறிது நேரம் தூங்கிவிட்டு, போதை தெளிந்ததும் நடந்தே வீட்டுக்குச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். காரை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்த நெல்லை டவுன் போலீஸார், மூவரையும் கைதுசெய்தனர். போதைக்காக மது பாட்டில் திருடச் சென்ற இடத்தில், காரை கடத்திச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க

மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை

மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியினரின் மகனாக தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்... மேலும் பார்க்க

திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 3... மேலும் பார்க்க