செய்திகள் :

நேபாள வெள்ளம்: உடல்களை அடக்கம் செய்கிறார்கள்; ஆனால் DNA-வை ஏன் சேமிக்கிறார்கள்?

post image

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 3,000-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.

சேறு மற்றும் இடிபாடுகளுக்குக் கீழே, அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாள வெள்ளம்
நேபாள வெள்ளம்

தொற்றுநோய் பிரச்னை

இதுவரை மீட்கப்பட்டுள்ள உடல்களில் 233 சித்வான் மாவட்டத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஆனால், உடல்களைத் தொடர்ந்து வைத்திருக்க சித்வான் மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான வசதி மற்றும் இடம் இல்லை.

அந்த உடல்களை அப்படியே வைத்திருந்தால், உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும். மேலும், இந்த உடல்கள் மூலம் தொற்றுநோய்கள் பரவலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதனால், நேபாள அரசாங்கம் அந்த உடல்களைப் புதைத்து வருகிறது.

சிக்கலைத் தடுக்க...

உடல்களை அடையாளம் காணாமல் புதைப்பதால், இறந்தவர்கள் யார் என்று தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.

இதைத் தடுக்க, அதிகாரிகள் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு அவற்றிலிருந்து டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கின்றனர்.

எதிர்காலத்தில் அடையாளம் காண்பதை எளிதாக்கும் வகையில், அவர்கள் அடையாள அல்லது குறிப்பு எண்களைப் பயன்படுத்திப் பதிவுகளையும் பராமரிக்கின்றனர்.

ஒவ்வொரு உடலுக்கும் அதன் இருப்பிடக் குறியீட்டுடன் ஒரு தனித்துவமான அடையாள எண் உள்ளது.

இதன் மூலம் டி.என்.ஏ பொருந்தும்போது, உறவினர்கள் அந்த உடலைத் தோண்டி எடுத்துக்கொள்ள முடியும்.

`மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை' - நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சுமார் 256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்ட (PMLA) வழக்கில்... மேலும் பார்க்க

"அமைச்சர் ரமேஷின் விசுவாசத்துக்கான ஆட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதம்!"- தோழர் கே.சுப்பராயன் காட்டம்

த.வெ.க அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவருகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு குஜிலியம்பாறை தாசில்தார் உத்தரவிட்டிருந்ததும், தமிழக உயர் கல்வ... மேலும் பார்க்க

'முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்'- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கார் கொடுத்தீங்க, டிரைவர்?'- `ஹெல்மெட்’ அணியாமல் வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு அபராதம்

புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு கார் வழங்கப்பட்டிருக்கும் நிலையி... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: 'இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை' - இந்தியாவின் அடுத்தக்கட்ட உதவி என்ன?

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26), உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் பனிப்பாறை விழுந்து சரிந்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட... மேலும் பார்க்க

‘இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் அவர் இந்து அல்ல’ - மோகன் பகவத்

‘ஒரே உலகம், ஒரே மனிதகுலம்’ என்கிற நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 29) நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இந்து - முஸ்லிம் குறித்து... மேலும் பார்க்க