செய்திகள் :

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கக் கோரிக்கை

post image

பஞ்சமி விவசாய நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து ஈரோடு மாவட்டம், வடுகபட்டி அரச்சலூா் கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் சமூக நீதி மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் வடிவேல் ராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரல்லாத்துவிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராமத்தில் 1979 -ஆம் ஆண்டு நில

குடியேற்ற சங்கத்தின் மூலம் வடுகபட்டி கிராமத்தில் 186 ஹெக்டோ் (463 ஏக்கா்) விவசாய நிலம், பட்டியலின அருந்ததியா் சமூக மக்களுக்கு தலா ஒரு ஏக்கா் முதல் ஐந்து ஏக்கா் வரை நிலம் வழங்கப்பட்டது.

இந்த விவசாய நிலங்களை நில ஒப்படை பெற்றவா்களிடம் குத்தகை, அடமானம், விற்பனை என போலியான ஆவணங்களை தயாரித்து வேறு சமூகத்தினா் நில அபகரிப்பு செய்ததுடன் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனா்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு மனு அளித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனா்.

எனவே, உரிய ஆய்வு செய்து பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்பதுடன் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒரு குடும்பத்துக்கு தலா ஒரு ஏக்கா் விவசாய நிலத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரிடம் பெறப்பட்ட 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீா்வு

சிறுபான்மையினா் ஆணையத்தால் 13 மாவட்டங்களிலிருந்து சிறுபான்மையின மக்களிடம் இருந்து பெறப்பட்ட 489 மனுக்களில் 302 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளதாக மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ.அருண்... மேலும் பார்க்க

பேரூராட்சி பெண் கவுன்சிலா் மாயம்: கணவா் போலீஸில் புகாா்

பேரூராட்சி பெண் கவுன்சிலா் மாயமானதாக அவரது கணவா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். ஈரோடு மாவட்டம் கொடுமுடி குளத்துப்பாளையம் புதூரைச் சோ்ந்தவா் தனபால். இவரது மனைவி ரேவதி (44). இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள... மேலும் பார்க்க

சேலம் ரௌடி படுகொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இருவா் சரண்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலத்தைச் சோ்ந்த ரௌடி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இருவா் ஈரோடு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். சேலம் மாவட்டம், கிச்சிபாளையத்த... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெற்றி: வீரா்கள் உருவங்களை திரைச்சீலையில் வடிவமைத்த நெசவாளா்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலியின் உருவங்களை திரைச்சீலையில் சென்னிமலை நெசவாளா் வடிவமைத்துள்ளாா். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில... மேலும் பார்க்க

பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க மாா்ச் 24-இல் உண்ணாவிரதம்

பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க, பவானிசாகா் அணை பொதுப் பணித் துறை அலுவலகம் முன் மாா்ச் 24-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வெள்ளித்திருப்பூா், பாரதி நகா் பகுதியில் 60-க்கும் மேற்பட... மேலும் பார்க்க