செய்திகள் :

”படிப்புக்கு பண உதவி செய்வார்” - மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பெண் ஆசிரியர் உட்பட இருவர் கைது

post image

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (38). இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.

மேலும் இவர் தனது வீட்டில் மாணவிகளுக்கு டியூசன் எடுத்துள்ளார். திவ்யாவிடம் 16 வயது மாணவி ஒருவர் டியூசன் படித்திருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது,

போக்சோவில் கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியர்
போக்சோவில் கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியர்

தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சண்முகசுந்தரராஜ் (61). இவரும் ஆசிரியை திவ்யாவும் நன்கு பழக்கமானவர்கள்.

இந்நிலையில், மாணவியின் குடும்ப நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட திவ்யா தனக்கு தெரிந்த நபர் ஒருவர் இருக்கிறார், படிப்புக்கு பண உதவி செய்வார் என சண்முகசுந்தரராஜை மாணவிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சண்முகசுந்தரராஜும், திவ்யாவும் கூட்டு என்பதால் மாணவியைத் தவறாக நடத்துவதற்காக திவ்யா இதைச் செய்துள்ளார். இதையடுத்து சண்முகசுந்தரராஜ் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும் கடந்த ஒரு வருடமாக மாணவிக்கு போன் செய்து ஆபாசமாகப் பேசி வந்துள்ளார்.

இதை வெளியே சொன்னால் படிப்பு கேள்வி குறியாகும் என்கிற பயத்தில் மாணவி யாரிடமும் இதைச் சொல்லவில்லை என்கிறார்கள். ஒரு கட்டத்தில் சண்முகசுந்தரராஜ், எல்லை மீறிய நிலையில் தன் தோழியிடம் அழுது புலம்பியிருக்கிறார் அந்த மாணவி. பின்னர், மாணவி படிக்கும் பள்ளியின் பிரின்ஸ்பால் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.

போக்சோ சட்டம்
போக்சோ சட்டம்

உடனே பிரின்ஸ்பால், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் மாணவிக்கு சண்முகசுந்தரராஜ் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததும், அதற்கு திவ்யா உடந்தையாக இருந்ததும் உறுதியானது.

இதைதொடர்ந்து, சண்முகசுந்தரராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திவ்யா இருவரையும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். இதை முன்கூட்டியே அறிந்த சண்முகசுந்தரராஜ் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டதாகச் சொல்கிறார்கள்.

குமரி: போன் பயன்படுத்தியதால் ஆசிரியர் கண்டிப்பு? 3வது ​மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெத்லகேம் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்றுவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை ... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர், கொலை மிரட்டல்; இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜுமுதீன் என்பவரும் காதலித்து வந்தனர்.இந்தநிலையில், இருவருக்கும் கரு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது?

காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதியுல... மேலும் பார்க்க

"சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது" - அடிதடி வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான... மேலும் பார்க்க

"என் மனநிலையைப் பாழாக்கிவிட்டாய்" - தேனிலவில் மாதவிடாய் எனச் சொன்ன மனைவியைக் கொல்ல முயன்ற கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு 2023ம் ஆண்டு நிகில் என்பவருடன் திருமணம் நடந்தது. அத்திருமணம் முடிந்தவுடன் தம்பதியினர் அந்தமான் நிகோபார் பகுதிக்கு தேனிலவு சென்றனர். ஆனால் தேனில... மேலும் பார்க்க

விசிக-வினர் சாலை மறியல்; கடக்க முயன்ற இளைஞர் - தாக்கிய போலீஸை திருப்பி அடித்த இளைஞர்; நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் அக்கட்சி மாநாட்டிற்காக நிர்வாகிகள் ... மேலும் பார்க்க