செய்திகள் :

'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

post image

முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி காட்டி வருகிறது.

CM Vijay
CM Vijay

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக முதல்வர் விஜய் கரூருக்கு செல்கிறார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஆனால், நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருக்கும் பத்திரிகையாளர்கள் அடாவடியாக நடத்தியிருக்கின்றனர்.

முதல்வரின் மக்கள் சந்திப்பு நடக்கும் அரங்குக்குள் நின்ற பத்திரிகையாளர்களை 'முதல்வரின் பாதுகாப்பு கருதி உங்களுக்கு இங்கே இடம் கிடையாது. அரங்குக்கு வெளியே இருக்கும் கூடாரத்தில் போய் அமருங்கள்' என வலுக்கட்டாயமாக கூறியிருக்கின்றனர். 'நிகழ்வு நடக்கும் இடத்தில் இருந்தால்தான் செய்தி சேகரிக்க முடியும். அரங்குக்கு வெளியே இருந்தால் எப்படி செய்தி கொடுக்க முடியும்?' என பத்திரிகையாளர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த போதும், அதை துளியும் சட்டை செய்து கொள்ளத காவல்துறையினர் பத்திரிகையாளர்களை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

அரங்குக்கு வெளியே அனுப்பப்பட்ட பத்திரிகையாளர்கள்
அரங்குக்கு வெளியே அனுப்பப்பட்ட பத்திரிகையாளர்கள்

இத்தனைக்கும் செய்தி சேகரிக்கவிருக்கும் பத்திரிகையாளர்கள் ஒரு ஹோட்டலில் வந்து நிகழ்ச்சிக்கான பாஸை வாங்கிக் கொள்ளலாம் தவெகவின் அதிகாரப்பூர்வ மீடியா வாட்ஸ் அப் க்ரூப்பில் செய்தி சொல்லப்பட்டிருந்தது. அது காவல்துறை ஆய்வு செய்து வழங்கிய பாஸூம் கூட. இரவோடு இரவாக பாஸ் வாங்கிவிட்டுதான் பத்திரிகையாளர்கள் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்றிருக்கின்றனர். 'பாஸ் இருந்தாலும் பரவாயில்லை வெளியே போங்க...' என காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அடாவடியாக வெளியேற்றியிருக்கின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்

விஜய் தவெக தலைவராக இருந்தபோதும் சரி, முதல்வரான பிறகும் சரி ஊடகங்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை மரியாதையை கூட அவரது சகாக்கள் வழங்குவதில்லை. அதை முதல்வர் விஜய்யும் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்துக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் இழைக்கப்படும் அநீதி.!

சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.திருப்புவனம் காவல் நி... மேலும் பார்க்க

`ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு; இடைத்தேர்தலில் வச்சு வெளுத்து வாங்குங்க.!'- விஜய்யின் முழு உரை

2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர்... மேலும் பார்க்க

பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்?

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தளமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க

காமெனி இறுதி ஊர்வலத்தில் ஒலித்த மரண முழக்கம்! - அமெரிக்காவை போருக்குள் இழுக்க இஸ்ரேல் வழங்கிய தகவல்?

ஈரானின் முன்னாள் உச்சபட்ச தலைவர் அலி காமெனியின் ஒரு வார கால இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல, ஈரான் மீண்டும் சதித்திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் ப... மேலும் பார்க்க

திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகல்; ராஜினாமா! - இணைந்ததும் வேட்பாளராக்கி பலத்தை அதிகரிக்கும் பாஜக

திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மாநிலங்களவை எம்.பிக்களான சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகியோர் பாஜகவில் இணைந்த சில மணி நேரத்தில் மாநிலங்களை இடைத்தேர்தலில் அவர்களை தங்கள... மேலும் பார்க்க