செய்திகள் :

பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡

post image

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலை செய்த ரஞ்சித் படேல் என்பவருக்கும் கொல்லப்பட்ட நேஹா படேல் (24 வயது) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

நேஹாவின் சகோதரரின் கூற்றுப்படி ரஞ்சித் சமீபத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். மேலும், பப்ஜி விளையாட்டுக்கும் அடிமையானார்.

ரஞ்சித் படேல் - நேஹா படேல்
ரஞ்சித் படேல் - நேஹா படேல்

இதனால், தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, நேஹா தன் கணவரிடம் பப்ஜி விளையாட்டிலேயே மூழ்கியிருப்பதை விட்டுவிட்டு வேலை தேடுமாறு கூறியிருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கடந்த சனிக்கிழமை இரவு நேஹாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். கொலை செய்தது மட்டுமல்லாமல் நேஹாவின் மைத்துனருக்கு கொலை பற்றி மெசேஜ் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

அதன்பின்னர் அவரின் வீட்டுக்கு வந்த நேஹாவின் குடும்பத்தினர், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து பேசியிருக்கும் போலீஸ் அதிகாரி உதித் மிஸ்ரா, ``வீட்டிற்குள் கழுத்து நெரித்த காயங்களுடன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதில், கணவர் தலைமறைவாகிவிட்டார்.

முதற்கட்ட விசாரணையின்படி, கணவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும், அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் நேஹாவின் குடும்பத்தினர், ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் கேட்ட வரதட்சணை கொடுத்த பிறகும் வரதட்சணையாக கார் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

காவல்துறை
காவல்துறை

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நேஹாவின் சகோதரர் ஷேர் பகதூர் படேல், ``என் சகோதரிக்கு இந்த மே 25-ம் தேதி திருமணம் நடந்தது. ரஞ்சித் தொடர்ந்து வரதட்சணை கேட்டுக்கொண்டே இருந்தார்.

சமீபத்தில் வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். அதனால் வேலை ஏதாவது தேடுமாறு கூறிய என் சகோதரியை அவர் சண்டையிட்டு கொன்றுவிட்டார்.

அதோடு என் மைத்துனருக்கு, ``நேஹாவைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள். அவரை நான் கொன்றுவிட்டேன். என்ன வேண்டுமானாலும் நீ செய்" என்று மெசேஜ் செய்தார்.

இந்தக் கொலையில் இதுவரையிலும் போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. ரஞ்சித் மட்டுமல்லாமல் அவரின் தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் அனைவரும் நேஹாவைத் துன்புறுத்தினர். எங்களுக்கு நீதி வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மறுபக்கம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறும் போலீஸ், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்... மேலும் பார்க்க

Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே ... மேலும் பார்க்க

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர்... மேலும் பார்க்க

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க