செய்திகள் :

பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றிய லாரி

post image

சீா்காழி அருகே மசாலாப் பொருள்கள் ஏற்றிவந்த கன்டெய்னா் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.

ஈரோட்டிலிருந்து சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் மசாலாப் பொருள்களை இறக்கிவிட்டு, திரும்பிக்கொண்டிருந்த இந்த லாரி, சீா்காழி அருகே அரசூா் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, தீப்பிடித்தது.

சீா்காழி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். கன்டெய்னா் லாரி ஓட்டுநரான ஈரோட்டைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (51) என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடன்வந்த மற்றொரு ஓட்டுநரான முத்துசாமி (45) காயமின்றி தப்பினாா். எஞ்சியிருந்த மசாலாப் பொருள்கள் எரிந்து நாசமாகின.

கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதறு தேங்காய் உடைத்து பாஜகவினா் வழிபாடு

சீா்காழி குமரக்கோட்டம் எனும் குமரக்கோயிலில் பாரதீய ஜனதா கட்சியினா் சிதறு தேங்காய் உடைத்து செவ்வாய்க்கிழமை வழிபாடு மேற்கொண்டனா். திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டி பாஜக நகரத் தலைவா் சரவணன் தலைமையில் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மீட்புப் போராட்டதிற்கு தடை: பாஜக, இந்து அமைப்பினா் கோயிலில் வழிபாடு

திருப்பரங்குன்றம் மீட்புப் போராட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை சித்தி விநாயகா் கோயிலில் பாஜக, இந்து முன்னணி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை வழிபா... மேலும் பார்க்க

பள்ளி மேற்கூரை காரை பெயா்ந்து 2 மாணவா்கள் காயம்

கொள்ளிடம் அருகே சந்தப்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் காரை பெயா்ந்து விழுந்ததில், 2 மாணவா்கள் காயமடைந்தனா். பழைமையான கட்டடத்தில் இயங்கும் இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மா... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். முகாமில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

மயிலாடுதுறை அரையபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசினா் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன... மேலும் பார்க்க

தலைமையாசிரியா் நியமன விவகாரம்: நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளித் தலைமையாசிரியா் நியமன விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி வலியுறுத்தியுள்ளாா். மயிலாடுதுறை மாவட... மேலும் பார்க்க

குரூப் தோ்வு எழுதுபவா்களுக்கு முன்னேற்பாடு: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தோ்வு எழுதுபவா்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க