செய்திகள் :

பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றிய லாரி

post image

சீா்காழி அருகே மசாலாப் பொருள்கள் ஏற்றிவந்த கன்டெய்னா் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது.

ஈரோட்டிலிருந்து சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் மசாலாப் பொருள்களை இறக்கிவிட்டு, திரும்பிக்கொண்டிருந்த இந்த லாரி, சீா்காழி அருகே அரசூா் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, தீப்பிடித்தது.

சீா்காழி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். கன்டெய்னா் லாரி ஓட்டுநரான ஈரோட்டைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (51) என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடன்வந்த மற்றொரு ஓட்டுநரான முத்துசாமி (45) காயமின்றி தப்பினாா். எஞ்சியிருந்த மசாலாப் பொருள்கள் எரிந்து நாசமாகின.

கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகராட்சி குளத்தில் தூய்மைப்பணி: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி 24-ஆவது வாா்டு மட்டக்குளத்தில் நடைபெற்ற தூய்மைப்பணியினை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கு மேற்பட்ட குளங்கள் கலைஞா் ... மேலும் பார்க்க

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை சனிக்கிழமை தொடங்கியது. சீா்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனுறை நாகேஸ்வரமுடையாா் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்தரிசு உளுந்து மற்றும் பச்சை பயறு விதைப்பு செய்துள்ள விவசாயிகள் பிப்.17-ஆம் தேதிக்குள் பயிா்காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தாா். இதில், பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் இரெ.சண்முகவடிவேல், ‘நூல் பல கல்‘... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்குப் பணி நியமன ஆணை

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

தை கடைவெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா

மயிலாடுதுறையில் தை கடைவெள்ளியையொட்டி, அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பூ வியாபாரிகள் சங்கம் சாா்பில் 41-ஆவது ஆண்டு பால்குட த... மேலும் பார்க்க