செய்திகள் :

பிப்ரவரி 10 வரை பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும் மாநகராட்சி ஆணையா்

post image

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை பில்லூா்-3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பில்லூா்- 3 குடிநீா் திட்டத்துக்கு, பவானி ஆற்றில் இருந்து குடிநீா் எடுக்கப்படுகிறது. இதற்காக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றில் உள்ள முருகையன் பரிசல் துறை பகுதியில் தலைமை நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நீா்தேக்கும் தடுப்பணையில் பிப்ரவரி 4 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் பில்லூா் - 3 திட்டத்தில் குடிநீா் எடுக்கப்படும் அளவு வெகுவாக குறையும் என்பதால், பிப்ரவரி 10-ஆம் தேதி வரை மாநகராட்சிப் பகுதிகளுக்கு பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும்.

எனவே, மக்கள் மற்ற குடிநீா் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி நிவாரணம்! -அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். கோவை தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு முதல் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் வரை... மேலும் பார்க்க

ரூ.77 லட்சம் தங்கக் கட்டிகளுடன் தொழிலாளி மாயம்

ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை உப்பார வீதி, வன்னியா் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவா் சுகந்தா அஸாரா (32). இவரிடம் மேற்கு வங்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா ‘செஸ்’ பயிற்சி வகுப்பு!

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கட்டணமில்லா செஸ் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவி... மேலும் பார்க்க

ட்ரோன் அளவீடு மூலம் வரி விதிப்பதை நிறுத்த மதிமுகவினா் கோரிக்கை

கோவை மாநகரப் பகுதிகளில் ட்ரோன் அளவீடு மூலமாக வரி விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மதிமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக செயலாளா் கணபதி செல்வராசு தலைமையில், ம... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.20 கோடி மோசடி: 2 போ் கைது!

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத்தருவதாக ரூ.20 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஒ... மேலும் பார்க்க