செய்திகள் :

பிரிட்டன் குடியுரிமை; ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரரா? - யார் இந்த முகமது அமீர்?

post image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.

முகமது அமீர்
முகமது அமீர்

2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அமீர், தனது வேகம், ஸ்விங் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து, பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

IPL-ல் அமீரை பார்க்க முடியுமா?

முகமது அமீர் தனது மனைவி நர்ஜிஸ்கானின் மூலம் நீண்டகால முயற்சிக்கு பிறகு பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதால், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் தொடரில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடும் அமீர், ஐபிஎல்லில் விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

முகமது அமீர்
முகமது அமீர்

எனினும், பிரிட்டன் குடியுரிமை கிடைத்திருப்பது மட்டுமே ஐபிஎல் வாய்ப்பை உறுதி செய்யாது. ஏலத்தில் எந்த அணி அவரைத் தேர்வு செய்கிறது, மேலும் BCCI-யின் நடைமுறைகள் என்ன என்பதே, அவரது ஐபிஎல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒருகாலத்தில் பாகிஸ்தானுக்காக உலகை மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர், வரும் காலங்களில் ஐபிஎல்லில் களமிறங்குவாரா? என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

TNPL 2026: சச்சினின் அதிரடி... நிதிஷின் போராட்டம் - சேலத்தை வீழ்த்திய கோவை கிங்ஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் 4-வது லீக் போட்டி, திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பரபரப்பாக நகர்ந... மேலும் பார்க்க

RBI வங்கி மேலாளராக கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?| வைரல் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன், பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக பணியாற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வங்கி ஊழியர்களுடன் அவர... மேலும் பார்க்க

Auqib Nabi: காஷ்மீரில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான முதல் வீரர் - யார் இந்த ஆகிப் நபி?

சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்குச் செல்ல முடியுமா? இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் மையங்களுக்கு வெளியே வளரும் ஆயிரக்கணக்கான இளம் வீரர்களைப் போலவே இந்தக் கேள்வியை பலமுறை எதிர்கொண்டவர் ஆகிப் நப... மேலும் பார்க்க

10-வது ஆண்டில் TNPL: புதிய சீசன், புதிய எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் இன்று (ஆகஸ்ட் 4) திண்டுக்கல்லில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழ் திரை மற்றும் விளை... மேலும் பார்க்க

"டெஸ்ட் போட்டிகளில் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர் நீங்கள்தான்" - ரஹானே குறித்து விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திரு... மேலும் பார்க்க

Rahane: '278... Signing Off' - வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன் ரஹானே!

"Cap No.278... Signing Off" சமூக வலைத்தளத்தில் இந்த ஒற்றை வரியைப் பதிவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார். இந்தி... மேலும் பார்க்க