செய்திகள் :

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

post image

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறும் போட்டியாளர், பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Bigg Boss - The Common Man
Bigg Boss - The Common Man

இந்த காமன் மேன் நிகழ்ச்சிக்குத் தற்போது டாப் 50 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து இறுதிக்கட்டப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வின் நடுவர்களாக ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மேலும், சீசன் 7-ல் கவனத்தைப் பெற்ற மாயா கிருஷ்ணன் இந்த காமன் மேன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஆரி அர்ஜுனன், "பிக்பாஸ் என் வாழ்க்கையையே மாற்றிய ஒரு மேடை. இந்த சீசனில் வெறும் முகமூடி அணிந்த நபர்களை நாங்கள் தேடவில்லை; உண்மையான, சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட நபர்களையே தேடுகிறோம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் போலியான எந்தவொரு பிம்பமும் நீண்ட காலம் நிலைக்காது. நேர்மையும் தன்னம்பிக்கையுமே ஒருவரை இறுதிவரை கொண்டு செல்லும்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Bigg Boss - The Common Man
Bigg Boss - The Common Man

தொடர்ந்து பேசிய ராஜு ஜெயமோகன், "நாம் நாமாக இருப்பதே போதுமானது என்பதைத்தான் பிக்பாஸ் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

பல வருடங்களாக இந்த வாய்ப்பிற்காகக் காத்திருந்த சாமானியர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் தனித்துவமான ஆற்றல் மக்களை நிச்சயமாகக் கவரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஓவியா பேசுகையில், "மக்களுடன் எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை இந்த சீசன் சாமானிய மக்களுக்குக் கொடுக்கப்போகிறது.

தயக்கமில்லாத, இயல்பான, உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர்களையே மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்" என்றார்.

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவ... மேலும் பார்க்க

"'மெட்டி ஒலி 2' சீக்கிரமே நடக்க வாய்ப்பு இருக்கு!" - விஷ்வா கம்பேக் பேட்டி | Samanthi

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திரு... மேலும் பார்க்க

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பா... மேலும் பார்க்க

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்த... மேலும் பார்க்க

Samanthi: "சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்!" - சுர்ஜீத் பேட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தியாராகம்' தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித். அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது 'சாமந்தி' தொடரின் மூலம் மீண்டும் 'ஜீ தமிழ்' சேனலுக்கு வந்திருக... மேலும் பார்க்க

Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு - இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற பிக்பாஸ் சீசன் 10 க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.இதுவரை சுமார் அறுபது பேரிடம் நிகழ்ச்சித் தயார... மேலும் பார்க்க