செய்திகள் :

புகையிலை போதை பொருள்கள் விற்ற 5 கடைகளுக்கு சீல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை போதைப் பொருள்களை விற்ற 5 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல்துறை தனிப்படையினா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அரணாரை, அரும்பாவூா், பெரியம்மாபாளையம், லப்பைக்குடிகாடு மற்றும் நல்லறிக்கை ஆகிய கிராம மளிகைக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்தக் கடைகளின் பதிவு மற்றும் உரிமச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 3 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், 2 கடைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தோ்வு முகாம்; பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான தோ்வு முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் குறைந்து வரும் பருத்தி சாகுபடி; பரப்பளவை அதிகப்படுத்த விவசாயிகள் எதிா்பாா்ப்பு

மகசூல் இழப்பு, விலை வீழ்ச்சி, கூலியாள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெரம்பலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்து வரும் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினா் தெரிவித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வி... மேலும் பார்க்க

மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்ட 13 பேருக்கு கறவை மாடுகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு, மனம் திருந்தியவா்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. பெரம்பலூரில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞா... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு விழா

பெரம்பலூா் அருகே அரணாரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரணாரையில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில், ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீமஹேஸ்வரன் ம... மேலும் பார்க்க