செய்திகள் :

திண்டுக்கல்: பிரபல நகைக்கடையில் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய ஊழியர்கள்!

post image

திண்டுக்கல்லில் ஸ்ரீ வாசவி தங்க மாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு தணிக்கையாளராக வைஷ்ணவி இருந்து வந்துள்ளார். இவர், கடந்த 02.12.2025ஆம் தேதி தரைத்தளத்தில் உள்ள தங்க நகை  (Short Necklace) பிரிவில் உள்ள நகைகளை தணிக்கை செய்ததில் 1010.500 கிராம் எடையுள்ள 45 எண்ணங்கள் (தங்க நகைகள் மதிப்பு ரூ.1,43,23,022) குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக நகை கடையின் துணைப் பொது மேலாளர் ரேணுகேசனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

நகை மதிப்பு குறைவாக உள்ளதாக சொல்லபட்ட அந்த தளத்தில் பாலசுப்பிரமணியன், சிவா, கார்த்திக், விநாயகன், செல்வராஜ், ரெங்கநாயகி, ஆனந்த ஜோதி, ஆனந்தன் ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதில், ஷார்ட் நெக்லஸ் பிரிவின் மேலாளராக பாலசுப்ரமணியன் உள்ளார். அவருக்கு கீழ் அந்தப் பிரிவில் சிவா என்பவர் தலைமை விற்பனை பணியாளராக வேலை செய்து வருகிறார். மேலாளர் பாலசுப்பிரமணியன் இல்லாத நேரத்தில் சிவா மேலாளர் பொறுப்பை கவனித்து வந்துள்ளார்.

சிவா

இதனை அடுத்து நகை கடையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களிடமும் துணை பொது மேலாளர் விசாரித்த போது, கடந்த 05.09.2025 மற்றும் 14.11.2025 தேதிகளில் பாலசுப்பிரமணியன் விடுப்பு எடுத்துள்ளார். அந்த சமயத்தில் வேலைக்கு வந்த சிவா 7 ஷார்ட் நெக்லஸ் தங்க நகைகளை எடுத்துள்ளது தெரிய வந்தது.

மேலும் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த தினங்களில் எல்லாம் சிவா தங்க நகைகளை எடுத்து நகை மதிப்பீட்டடாளர் செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார் கார்த்திக் மற்றும் விற்பனையாளர் விநாயகன் உதவியுடன் டேமேஜ் என காண்பித்து நகையை விற்று பணத்தை பங்கு போட்டுக் கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

கார்த்திகேயன் மற்றும் விநாயகம்

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஸ்ரீ வாசவி தங்க நகை கடை துணை பொது மேலாளர் ரேணுகேசன் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமை விற்பனையாளர் சிவா, நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார் கார்த்திக் மற்றும் விற்பனையாளர் விநாயகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இது குறித்து விசாரணை செய்த திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவா, விநாயகம் மற்றும் கார்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு: மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் கர்ப்பம்; சிக்கிய சிறுவன், இளைஞர் - என்ன நடந்தது?!

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர்மல்க இளம்பெண்ணின் அம்மா ஒருவர் வந்தார். அவர், போலீஸாரிடம் `என் மகளை ஏமாற்றி சக்திவேல் என்ற இளைஞரும், 17 வயது சிறுவனும் கர்ப்பமாக்கிவிட்ட... மேலும் பார்க்க

`இரவில் பயத்தில் வாழ்கிறோம்' - ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த 19 மாணவிகள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்வதாக நிர்வாகத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இரவு நேரத்தில... மேலும் பார்க்க

மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.இதில் தனக்கு தொடர்பு இல்லை எ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கொடூரமாகத் தாக்கப்படும் வடமாநில இளைஞர்; சர்ச்சையைக் கிளப்பும் வீடியோ; வலுக்கும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் நான்கு சிறுவர்களால் அரிவாள்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மத்தியப் பிரதேசத்த... மேலும் பார்க்க

”வொர்க் ப்ரம் ஹோம்; ஆன்லைன் ரிவ்யூ..” விளம்பரத்தால் இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த “வீட்டிலிருந்த படியே வேலை” என்ற விளம்பரத்தைப் பார்த்து அதை க்ளிக் செய்துள்ளார். உடனே அவருக்கு வாட்ஸ் அப்... மேலும் பார்க்க

மும்பை: "ஆண் குழந்தை இல்லை" - 6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் சிக்கியது எப்படி?

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் கலம்பொலி என்ற இடத்தில் வசிப்பவர் சுனந்தா(30). இவரது கணவர் சாப்ட்வேர் பொறியியலாளராக இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.அச்சிறுமிக்கு ஆரம்பத்தில் இ... மேலும் பார்க்க