செய்திகள் :

மும்பை: "ஆண் குழந்தை இல்லை" - 6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் சிக்கியது எப்படி?

post image

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் கலம்பொலி என்ற இடத்தில் வசிப்பவர் சுனந்தா(30). இவரது கணவர் சாப்ட்வேர் பொறியியலாளராக இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

அச்சிறுமிக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியாகப் பேச வராது. இந்நிலையில், வீட்டில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரது தந்தை சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மருத்துவமனையில் டாக்டர்கள் சோதித்துப் பார்த்தபோது சிறுமி இறந்திருந்தது தெரிய வந்தது.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சிறுமியின் தாயார் தெரிவித்தார். டாக்டர்களுக்கு சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. மருத்துவ காரணத்தால்தான் தனது மகள் இறந்தார் என்று சுனந்தா தெரிவித்துக்கொண்டிருந்தார்.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அச்சிறுமியின் தாயார் சுனந்தாவை அழைத்துச்சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த தீவிர விசாரணையில் மகளைக் கொலை செய்ததை சுனந்தா ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் தனது மகள் சரியாக மராத்தி பேசவில்லை என்பதற்காக கொலை செய்தேன் என்று தெரிவித்தார்.

ஆனால் அது உண்மையான காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி போலீஸார் மேலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சுனந்தா தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

அதோடு மகளும் சரியாகப் பேச முடியாமல் இருந்ததால் அவரைக் கொலை செய்திருந்தார். அதோடு மன நலப் பிரச்னைக்காக ஏற்கனவே சிகிச்சை எடுத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுனந்தாவை போலீஸார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; வீடியோ ஆதாரத்துடன் புகார்; தலைமறைவான காவலர்

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது அந்தக் காவலர் தலைமறைவாகி... மேலும் பார்க்க

சென்னை: ஹவுஸ் ஓனரிடம் கைவரிசையைக் காட்டிய ஆட்டோ டிரைவர்; தோழியுடன் சிக்கியது எப்படி?

சென்னை, நெற்குன்றம், சக்தி நகர், 12-வது தெருவில் கார்த்திகேயன் (40) என்பவர் டிஸ்யூ பேப்பர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் 24.12.2025-ம் தேதி மாலை பீரோவில் வைத்திருந்த பணத்தை சரிபார்த்த ப... மேலும் பார்க்க

AI உதவியால் Hydroponics கஞ்சா; Digital Currency ஆன ரூ.4.5 கோடி; MBA பட்டதாரிகள் கைதான பின்னணி என்ன?

புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக... மேலும் பார்க்க

கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய‌ காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மே... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாராயணன், (68). பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த இவரை கடந்த 2025 ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities என்ற பங்கு சந்தை முதலீட்டு நிறுவன அதிகார... மேலும் பார்க்க