செய்திகள் :

கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய‌ காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்

post image

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள்

அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் 5 தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் திடீரென கிணற்றின் மேல் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது.

பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மீது டன் கணக்கான மண் விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்திருக்கிறார்கள். இதைக் கண்டுப் பதறிய சக தொழிலாளர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை

மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள்

மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மற்றொரு நபரை சடலமாக மீட்டுள்ளனர்.

இந்த துயரம் குறித்து தெரிவித்த தொழிலாளர்கள், "குண்டாடா பிரிவு பகுதியைச் சேர்ந்த 50 வயதான செல்வன், 40 வயதான சதீஸ் ஆகிய இருவரும் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீலகிரியில் பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் இது போன்ற கட்டுமானப் பணிகளால் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழக்கும் துயரங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள்

அனுமதி பெறாமல் கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்த வருவாய்த்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.

முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாராயணன், (68). பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த இவரை கடந்த 2025 ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities என்ற பங்கு சந்தை முதலீட்டு நிறுவன அதிகார... மேலும் பார்க்க

நீலகிரி: டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதலாகக் கேட்ட பணியாளர்கள்; கடைக்குள் நுழைந்து தாக்கிய தந்தை, மகன்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயைப் பெறுவதாக பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.மதுபாட்டில்களில் க... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்க... மேலும் பார்க்க

நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருக... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது!

சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி ... மேலும் பார்க்க

பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!

பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வ... மேலும் பார்க்க