செய்திகள் :

சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது!

post image

சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி செய்து வந்திருக்கிறார். அப்போது ராணிபேட்டையைச் சேர்ந்த லட்சுமி பிரியா, சின்னத்துரை, அருண், மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி அமிர்தராஜுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் ஆண்டனி அமிர்தராஜியிடம் கால்நடை மருத்துவ சீட்டுக்காக 42 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் லட்சுமி பிரியா உள்ளிட்ட 4 பேரும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

கைது
கைது

உடனே ஆண்டனி அமிர்தராஜ் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டபோது 4,44,000 ரூபாயை மட்டும் திரும்பக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு மீதிப் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்திருக்கிறார்கள். இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஆண்டனி அமிர்தராஜ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

மோசடி வழக்கில் கைதான லட்சுமி பிரியா

விசாரணையில் இந்தக் கும்பல் ஆண்டனி அமிர்தராஜிடம் பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த மோசடி வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியாவை (45) போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!

பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர்

கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் ... மேலும் பார்க்க

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்த... மேலும் பார்க்க

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார்.... மேலும் பார்க்க

சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகி... மேலும் பார்க்க