செய்திகள் :

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

post image

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தில் முக்கிய பதவியிலிருக்கும் ராமமூர்த்தி என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக மாணவி தரப்பில் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து மாணவி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மருத்துவ கலந்தாய்வில் இந்தக் கல்லூரியில் பல் மருத்துவத்தை மாணவி தேர்வு செய்தார். விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மாணவிக்கு கல்வி உதவி தொகை வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவி, தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் 18.12.2025-ம் தேதி இரவு விடுதியின் வார்டன் ஜான்சி என்பவர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்திக்கும்படி மாணவியின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதன்படி 19-ம் தேதி காலையில் மாணவியும், நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து பேசியிருக்கிறார்.

டார்ச்சர்

அப்போது, கல்லூரியில் சிசிடிவி இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்ற ராமமூர்த்தி, மாணவியின் வயதைக் கேட்டிருக்கிறார். பின்னர் மாணவியை ஆபாசமாக பார்த்ததோடு தன்னுடன் ரிலேசன்ஷிப்பில் இருந்தால் பெர்சனலாக உதவி செய்வதாக மாணவியிடம் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு மாணவி அதிர்ச்சியடைந்ததோடு அதற்கு மறுப்பும் தெரிவித்திருக்கிறார். உடனே `உன்னுடைய மதிப்பெண்ணை (internal mark) குறைத்துவிடுவேன்' என்று ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். இதையடுத்து ராமமூர்த்தி பேசியதை எங்களிடம் மாணவி தெரிவித்தார். உடனே கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தோம். உடனே மாணவியின் செல்போனை வாங்கிய வார்டன் ஜான்சி, தான் அனுப்பிய மெசேஜ்களை அழித்திருக்கிறார். அதோடு வெள்ளைத் தாளில் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார். இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அங்கு எந்தவித பதிலும் சொல்லாததால் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம்" என்றனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மாணவி குற்றம்சாட்டும் வார்டன் ஜான்சி, நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் ... மேலும் பார்க்க

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார்.... மேலும் பார்க்க

சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகி... மேலும் பார்க்க

சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் ... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய ... மேலும் பார்க்க