செய்திகள் :

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

post image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் சுனி என்ற சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகிய ஆறு பேருக்கும் தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது, எர்ணாகுளம் பிரின்சிபல் செசன்ஸ் கோர்ட். இதற்கிடையில் சிறைக்குச் செல்லும் முன் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக பெயரைக்கூறி வீடியோ வெளியிட்டார் இரண்டாவது குற்றவாளியான மார்ட்டின் ஆண்டனி. பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை, அது கட்டுக்கதை என அந்த வீடியோவில் கூறியிருந்தார். விய்யூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மார்ட்டின் ஆண்டனி மீது திருச்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை மன வருத்ததுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

சுனில்குமார் என்ற பல்சர் சுனி

இந்த நிலையில் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக மார்ட்டின் ஆண்டனி வெளியிட்ட வீடியோக்களை பணம் வாங்கிக்கொண்டு பகிர்ந்ததாக மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சமூக வலைதங்கள் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்களில் அந்த வீடியோக்களை மூவரும்  பகிர்ந்ததாகவும் அந்த வீடியோக்களை நீக்கம் செய்துள்ளதாகவும் திருச்சூர் சிட்டி போலீஸ் கமிஷனர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கூட்டு பாலியல் வன்முறை

இந்த நிலையில் நடிகை பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி பரிந்துரை செய்துள்ளார். டி.ஜி.பி பரிந்துரையை அரசு அங்கீகரித்துள்ளது. நடிகைக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் தோல்வியடைந்ததாக கூறப்பட்ட நிலையில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்த... மேலும் பார்க்க

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார்.... மேலும் பார்க்க

சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகி... மேலும் பார்க்க

சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் ... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய ... மேலும் பார்க்க