செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயந்தி மகன் ஆகாஷுடன் மங்காபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். ஹரிணி, ஹரிஷ் இருவரும் தந்தையுடன் காதி போர்டு காலனியில் வசித்து வருகின்றனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை

இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஹரிணியுடன் அவரது தாய் ஜெயந்தியின் தம்பி செந்தில்குமார் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து ஹரிணி தந்தை ராம்குமாரிடம் கூறியதை அடுத்து, அவர் செந்தில்குமாரைக் கண்டித்துள்ளார். அதற்கு "எனது அக்கா மகளிடம் நான் அப்படித்தான் பேசுவேன்" என்று கூறிய செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது செந்தில்குமார், தனது தாய் கோவிந்தம்மாள், சகோதரி இந்திராணி ஆகியோருடன் சேர்ந்து ராம்குமாரைக் கட்டையால் தாக்கியும், கம்பியால் தாக்கியும் உள்ளனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை

அப்போது தடுக்க முயன்ற ஹரிணிக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ராம்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமார், அவரது தாய் கோவிந்தம்மாள், சகோதரி இந்திராணி ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வா... மேலும் பார்க்க

மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் - உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு

மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு... மேலும் பார்க்க

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த கொழுந்தன் - மனைவியை அவதுறாக பேசியதால் ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி (26). இந்தத் த... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலன் துணையோடு கணவனை கொன்று, உடலை வெட்டி வீசிய மனைவி - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தெளசி என்ற இடத்தில் பேக் ஒன்று சாலையோரம் கிடந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ஒருவரின் உடல் இருந்தது. அதில் கை, கால் மற்றும் தலை இல்லாமல் இ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹ... மேலும் பார்க்க

நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து கிரண் ரத்தோட் உட்பட 3 நண்பர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்நேரம் பெண் ஒருவர் வந்து அந்த அறை கதவ... மேலும் பார்க்க