செய்திகள் :

”விஜய்யை அரசியல்வாதியாக நாங்கள் ஏற்கவில்லை” - சொல்கிறார் சரத்குமார்

post image

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நூறு நாள் வேலை திட்ட நாட்களை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. காந்தி பெயரை மாற்றிவிட்டு பொதுவான பெயர் வைக்கப்பட்டுள்ளது. காந்தியின் பெயரை நீக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. இதனை குறைகூறுவோர் வேலைவாய்ப்பு திட்டத்தால் என்ன பலன் என்பதை அறிந்து கொண்டு பேச வேண்டும்.

சரத்குமார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் பிறரின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாகப் பேசக்கூடாது. தமிழக வெற்றிக் கழகம் என முழுவதுமாக சொன்னால் எனக்கு அது எந்த கட்சி எனத் தெரியவில்லை. த.வெ.க., மு.வெ.க., இ.வெ.க என்று சொன்னால்தான் தெரிகிறது. விஜய்க்கு யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று தெரியவில்லை. எதிர்த்துப் பேசினால்தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.

அவரிடம் பதில் இருக்காது

மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தால்தான் செய்திகள் வரும் என, அவரிடம் யாரோ சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனால்தான் விஜய்யை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சியும் மக்கள் மத்தியில் பெரிய கட்சியாக காட்டப்பட்டு வருகிறது. விஜய்யை அரசியல்வாதியாக நாங்கள் ஏற்கவில்லை. அவரது கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது குறித்து அவரிடம் பதில் இருக்காது. அவரது பேச்சுகளுக்கு காலை முதல் மாலை வரை பதில் கூறலாம்.

சரத்குமார்

ஊடகங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். அவர் சமீபத்தில் பேசிய போது வீடுகள் தருவதாக சொல்லியிருக்கிறார். அதை கொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.  தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.கதான் பெரிய கட்சி. வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றிபெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன். தேர்தலில் போட்டியிட எனக்கு கட்சித்தலைமை வாய்ப்பு கொடுத்தாலும், பிறருக்காக பிரச்சாரம் செய்வதில் களம் இறங்குவேன்.” என்றார்.   

மும்பை தேர்தலில் மனைவி, வாரிசு, உறவுகளுக்கு சீட் கேட்கும் தலைவர்கள்: நெருக்கடியில் அரசியல் கட்சிகள்!

மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற... மேலும் பார்க்க

வேலூர் விஐடியில் நடந்த சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இதில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பே... மேலும் பார்க்க

”தீக்கொளுத்தும் வேலையைத் தவிர மக்களுக்கான எந்தப் பணியையும் மத்திய அரசு செய்யவில்லை” - அப்பாவு

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “தமிழக முதல்வர் சட்டப்படி ஆட்சி நடத்தி வருகிறார். பல மாநிலங்களில் ஆளுநரை அழைக்காமலேயே சட்டமன்றம் நடத்தப்படுகிறது.நமது முதல்வர் அத... மேலும் பார்க்க

Tuvalu: சில ஆண்டுகளில் மூழ்கிவிடும்; அடையாளம் அழியாது! - குட்டி நாட்டின் முயற்சி; உதவும் ஆஸ்திரேலியா

காலநிலை மாற்றத்தால் முழுமையாக அழியும் அபாயத்தில் உள்ள ஒரு நாடு, தன்னை ‘டிஜிட்டல் நாடாக’ மாற்றிக் கொண்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதுகிறது. அந்த நாடு தான் பசிபிக் பெருங்கடலின் நடுவே அமைந்துள்ள மிக... மேலும் பார்க்க

காங்கிரஸை `போனால் போங்கள்' என்ற உத்தவ், இப்போது கூட்டணிக்கு அழைக்கிறார்! - மும்பை தேர்தல் களேபரம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மும்பைதான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் ... மேலும் பார்க்க

"24 மணி நேரமும் மது விற்பனையாவதற்குக் காரணம் செந்தில் பாலாஜிதான்" - நயினார் நாகேந்திரன் காட்டம்

தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில், 40-வது நாளாக நேற்று கரூருக்கு வருகை தந்த ... மேலும் பார்க்க