செய்திகள் :

Instamart: ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய சென்னைவாசி; அதிகபட்சமாக ரூ.22 லட்சம்! | Swiggy 2025

post image

வீட்டிற்கு கீழே கடை இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை இப்போது மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு லிட்டர் பால் வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் ஆர்டர் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வகைகளை ஆன்லைனில் டெலிவரி செய்யும் ஸ்வக்கி நிறுவனம் உணவு தவிர்த்து மற்ற பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்வதற்காக இன்ஸ்டாமார்ட் என்ற ஆன்லைன் வர்த்தக தளத்தை நடத்தி வருகிறது. அந்த வர்த்தக தளத்தில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறித்து இன்ஸ்டாமார்ட் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் நடப்பு ஆண்டில் இன்ஸ்டாமார்ட்டில் ஒருவர் மட்டும் அதிக பட்சமாக ரூ.22 லட்சத்திற்கு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

சென்னையை சேர்ந்த ஒருவர் ரூ.1 லட்சத்திற்கு காண்டம் மட்டும் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

பெங்களூரை சேர்ந்த ஒருவர் ரூ.10-க்கு பிரிண்ட்-அவுட் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஒரே ஆர்டரில் ரூ.4.3 லட்சத்திற்கு ஐபோன்களை வாங்கி இருக்கிறார். மும்பையை சேர்ந்த ஒருவர் ரூ.15 லட்சம் செலவு செய்து ஆன்லைனில் தங்கம் வாங்கி இருக்கிறார்.

மெட்ரோ நகரங்களை தவிர்த்து இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆன்லைன் ஆர்டர்கள் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 10 மடங்கு அதிகமாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி இருக்கின்றனர் என்கிறது ஸ்விக்கி. அடுத்த இரண்டு இடத்தில் லூதியானாவும், புபனேஷ்வரும் இருக்கிறது. கரிவேப்பிலை, தயிர், முட்டை, பால், வாழைப்பழம் போன்ற பொருட்கள் அதிக அளவில் இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்படுகிறது.

பசுமைக்கு புகழ் பெற்ற கேரளா மாநிலம் கொச்சியில் கரிவேப்பிலை மட்டும் நடப்பு ஆண்டில் 368 முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை 7 முதல் 11 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் அதிக அளவில் ஆர்டர்கள் செய்யப்படுகிறது. டெலிவரி செய்ய வருபவர்களுக்கு பெங்களூரு மக்கள் ரூ.68 ஆயிரத்தை டிப்ஸாக கொடுத்து தங்களது தாராள மனதை காட்டி இருக்கின்றனர். ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரியில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நடப்பு ஆண்டில் செப்டம்பர் வரை 1092 கோடி நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை கட்டடத்தில் நுழைந்து 7 பேரை தாக்கிய சிறுத்தை புலி - பல மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை

மும்பை மத்திய பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் வனப்பகுதி இருக்கிறது. இங்கு சிறுத்தை புலிகள் அதிக அளவில் வசிக்கின்றன. அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்கிய சம்பவங்கள் நடந்த... மேலும் பார்க்க

புல்லட் பாபா: காவல் நிலையத்திலிருந்து மாயமாகும் புல்லட் - கோயில் கட்டி கும்பிடும் மக்கள்!

கோயில்களில் நந்தி, மயில் போன்ற கடவுள்களின் வாகனங்கள் அல்லது கடவுள்களிடம் எப்போதும் இருக்கும் விலங்குகள், பறவைகளுக்கு சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் புல்லட்டிற்கு க... மேலும் பார்க்க

திண்டிவனம்: நெருங்கும் மார்கழி மாதம்; விற்பனைக்கு வந்த கலர்...கலர் கோலமாவு! | Photo Album

விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கர்ப்ப பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தப்படும் மாணவிகள்; அரசு பழங்குடி விடுதிகளில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் தானே, நாசிக், கட்சிரோலி, புனே உட்பட சில மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக பழங்குடியின நலத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் விடுதிகள் நடத்த... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கடைசிநேர திருமண ரத்து; ஒரே ஆண்டில் ரூ.45 கோடி இழப்பு- ம.பி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 40 நாட்களில் 150 திருமணங்கள் கடைசி நேரத்தில் நின்று போய் இருக்கிறது என்றும் இதில் பெரும்பாலான திருமணங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்த வந்த பதிவுகளால்தான் ரத்தா... மேலும் பார்க்க