"நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!"- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் க...
"SIR -ல் என் குடும்பத்தினரின் ஓட்டையே பிரித்துவிட்டார்கள்" - செல்லூர் ராஜூ
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளம் பகுதியிலுள்ள அரங்கத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, "அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை, ஏமாற்றுபவர்களுக்குக் கிடையாது. சூப்பர் ஸ்டார் சொல்வது போல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் எடப்பாடி பழனிசாமி.
திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடன் இருக்கும் அனைவரும் வரலாம். போதைப்பொருட்களை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு வக்கில்லை, இப்போது சினிமாவில் எதை எடுத்தாலும் வன்முறை, சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.. சென்சார் போர்டு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.
எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், திமுக அதிமுக இடையேதான் போட்டி. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆரின் புகழைத்தான் பாடுகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் என்றைக்காவது கலைஞர் ஆட்சியை அமைப்பேன் என்று சொல்லியுள்ளாரா? என் பெரியப்பா எம்.ஜி.ஆர் என்று தான் சொல்கிறார். அதிமுகவிலிருந்து யார் விலகினாலும், எந்த ஒரு இழப்பும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் எத்தனையோ பேர் விலகினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தொண்டரை நம்பிதான் இருந்தார்கள்.
எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களை நம்பிதான் உள்ளார், அதை வெளியில் சொல்லவில்லை. திமுக நான்கரை ஆண்டுகளாக மதுரைக்கு என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை.. இதைச் சொல்லியே நாம் ஓட்டு வாங்கி விடலாம்.
மதுரை மாநகராட்சி ஊழல் ஒன்று போதாதா? மாநகரிலுள்ள நான்கு தொகுதியில் வெற்றி பெற, மூர்த்தி அல்ல மும்மூர்த்தி வந்தாலும் முடியாது. மதுரை மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும், இதை செய்தால் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நான்கு தொகுதிகளிலும் யாரை நிறுத்தினாலும் அதிமுக வெற்றி பெறும்.
எஸ் ஐ ஆரில் என் குடும்பத்தினரின் ஓட்டையே பிரித்துவிட்டார்கள், குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லது என்று கலெக்டரிடம் தெரிவித்தேன்" என்றார்.















