செய்திகள் :

சேலம்: அரசு பள்ளிக்குள் நள்ளிரவில் மாந்திரீக பூஜை? அதிர்ச்சியில் ஆசிரியர்கள் - போலீஸார் விசாரணை

post image

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமாண்டப்பட்டியில், ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ கென்னடி உட்பட 30 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பள்ளிக்கு வந்த இளைஞர்கள், தலைமை ஆசிரியர் அறை முன்பாக கருப்பு வட்டம், கட்டம் வரைந்து, மஞ்சள், குங்குமம், மரக்கட்டை பொம்மை மற்றும் தலைமை ஆசிரியர் அறை கதவில் மலர் மாலை அணிவித்து முட்டை வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி

உடனடியாக இளைஞர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். நள்ளிரவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் விடிய விடிய மாந்திரீக பூஜையில் ஈடுட்டுள்ளனரா? அல்லது மாணவர்கள் யாராவது விளையாட்டுக்கு இவ்வாறு செய்தார்களா? என்பது குறித்து ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாந்திரீக கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் அருகே அரசு பள்ளியில் முட்டை வைத்து மாந்திரீகம் செய்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார்.... மேலும் பார்க்க

சிவகாசி: குடும்பப் பிரச்னை; மனைவி, பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற நபர்!

Lவிருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையம் அருகே உள்ள முஸ்லிம் ஓடை தெருவில் நேற்று நடந்த பயங்கர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தன் மனைவி, இரு பிள்ளைகள் ... மேலும் பார்க்க

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய ... மேலும் பார்க்க

மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் - உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு

மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு... மேலும் பார்க்க

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த கொழுந்தன் - மனைவியை அவதுறாக பேசியதால் ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி (26). இந்தத் த... மேலும் பார்க்க