செய்திகள் :

”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை

post image

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.

பாதிரியார் காட்வின்

41 பேரை கொன்று குவித்தவனுக்கு, கையில் விலங்கிட்டவர் போல கை காட்டும் தலைவரான விஜய்யின் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகிறது. நான் விஜய்க்கு எதிரி அல்ல. ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை கேட்க வேண்டும்.

பாரம்பரியம் என்பது இன்றோடு, நேற்றோடு முடிவது அல்ல. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார். பாதிரியார் காட்வினின் இந்த பேச்சுக்கு த.வெ.க தொண்டர்கள், சர்ச் பாதிரியார் அலாய்சியஸிடம் புகார் அளித்தனர். ‘சர்ச்சை அரசியல் மேடையாக்க வேண்டாம், பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட வேண்டும்’ என இளைஞர்கள் முறையிட்டனர்.

பாதிரியார் காட்வின்

மேலும், ஒரு வழக்கு சி.பி.ஐ விசாரணையில் இருக்கும் போது, மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவது உள்நோக்கத்துடன் செயல்படும் குற்றம் எனவும், பாதிரியார் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தி.மு.க ஏஜெண்டாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே... மேலும் பார்க்க

போலி மருந்து விவகாரம்: பாஜக ஆதரவு முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியை தூக்கிய புதுச்சேரி போலீஸ்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகாரளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்...’புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்... மேலும் பார்க்க

Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக

விஜய்யின் பனையூர் தவெக அலுவலகத்தை அல்லோலகலப்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல். விஜய் காரின் குறுக்கே விழுந்து கட்டையை போட்டவர், ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் கேட் முன்பு அமர்ந்... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: `தாக்கரே சகோதரர்கள் வென்று விடுவார்கள்' - பாஜக-விடம் அதிக இடங்களை கேட்கும் ஷிண்டே

மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் சிவசேனா உடைந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தலாக இருப்பதால் மும்பையில் உத்தவ் தாக... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸுக்கு இம்முறை வாய்ப்பு மறுப்பா? - குளச்சலில் அலையடிக்கும் அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இயற்கை துறைமுக தொகுதி என்ற சிறப்பை பெற்ற குளச்சலில் தி.மு.க ஒருமுறையும், அ... மேலும் பார்க்க