செய்திகள் :

நீலகிரி: டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதலாகக் கேட்ட பணியாளர்கள்; கடைக்குள் நுழைந்து தாக்கிய தந்தை, மகன்

post image

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயைப் பெறுவதாக பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

மதுபாட்டில்களில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலை மற்றும் காலி பாட்டிலைத் திரும்ப பெறுவதற்காக ஒட்டப்படும் 10 ரூபாய்க்கான வில்லை ஆகியவற்றை விடவும் கூடுதலாக 10 ரூபாயைக் கட்டாயமாக வசூலிக்கும் முறைகேடுகள் தொடர்பாக அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சி
தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சி

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் இயங்கி வரும் மதுபானக் கடைக்கு நேற்று மது வாங்கச் சென்றவர்களிடம் கூடுதலாக 10 ரூபாயைக் கேட்டு பணியாளர்கள் நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் இருவர் கடைக்குள் நுழைந்து பணியாளர்களைத் தாக்கியுள்ளனர். பணியாளர்களைக் கடுமையாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட டான் சில்வஸ்டர் மற்றும் அவரின் மகன் ஹாலன் ரூபன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்; 500 வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்க... மேலும் பார்க்க

நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருக... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது!

சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி ... மேலும் பார்க்க

பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!

பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர்

கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் ... மேலும் பார்க்க