செய்திகள் :

நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

post image

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி கடந்த 8-ம் வகுப்பு படித்த போது நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

நெல்லை நீதிமன்றம்

அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அச்சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது தாயார், அவரை உள்ளூரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அச்சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் தந்தையே சிறுமியை சீரழித்தது தெரியவந்தது. தந்தை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சிறுமிக்கு குறை மாதத்தில் பச்சிளம் குழந்தை பிறந்தது. மறுநாளே அக்குழந்தை உயிரிழந்தது.

நெல்லை நீதிமன்ற வளாகம்

இந்த வழக்கில் அறிவியல் பூர்வ ஆதாரத்தை திரட்ட குழந்தையின் உடலில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. கடந்த அக்டோபர் 30-ம் தேதி வெளியான முடிவில் சிறுமியின் கர்பத்திற்கு தந்தைதான் காரணம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதலில் குற்றத்தை மறைத்த தந்தை டி.என்.ஏ பரிசோதனை மூலம் சிக்கினார். நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். நீதிபதி சுரேஷ் குமார் தனது 76 பக்க தீர்ப்பில், “இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. தந்தை என்பவர் குழந்தைக்குப் பாதுகாப்பாக அரணாக இருக்கக்கூடியவர். இந்த வழக்கில் டி.என்.ஏ பரிசோதனை முடிவு மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. சிறுமி அளித்த வாக்குமூலம் வேதனைக்குரியது.

நெல்லை நீதிமன்ற வளாகம்

இது போன்ற கொடூர குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்க முடியும். குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தீர்ப்பு அவசியமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள முதல் தூக்கு தண்டனை தீர்ப்பு இதுதான். அதே நேரத்தில் நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்புகளில் இது மூன்றாவது தூக்கு தண்டனை தீர்ப்பாகும்.

சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது!

சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி ... மேலும் பார்க்க

பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இளைஞரால் பரபரப்பு!

பெங்களூருவில் வசிப்பவர் பாலமுருகன் (40). தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். அவர் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார். இவர் மனைவி புபனேஷ்வரி (39). இவர் அரசு வ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர்

கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் ... மேலும் பார்க்க

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்த... மேலும் பார்க்க

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார்.... மேலும் பார்க்க