செய்திகள் :

சவூதி தீவில் சொகுசு வில்லாக்களை வாங்கிய ரொனால்டோ - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

post image

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

சமீபத்தில் நடைபெற்ற சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

மிகவும் கடினமான இந்த கிக்கை, 40 வயதில் சுலபமாக செய்து கால்பந்தின் ஜாம்பவான் என்பதை ரொனால்டோ நிரூபித்திருந்தார்.

இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள தீவு ஒன்றில் ரொனால்டோவும், அவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் இணைந்து இரண்டு வில்லாக்களை வாங்கியிருக்கின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சவூதி அரேபியாவின் கடற்கரையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, நுஜுமா என்ற தீவு.

ரொனால்டோ- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்
ரொனால்டோ- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்

இந்த தீவில் தான் இரண்டு சொகுசு வில்லாக்களை வாக்கியிருக்கின்றனர். சுற்றி கடல் நீர், பிரகாசமான பவளப் பாறைகள் மற்றும் பரந்து விரிந்த வெண்மையான மணல்கள் இந்தத் தீவின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.

இந்த நுஜுமா தீவில் மொத்தம் 19 வில்லாக்கள் உள்ளன. கடற்கரை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகள் முதல் உள்ளூர் கைவினைப் பொருள்களை வரை எல்லாம் இந்த தீவில் இருக்கின்றன.

ChatGPT மூலம் உருவான மாப்பிள்ளை! - ஜப்பானில் நடந்த வினோத AI திருமணம்!

ஜப்பானைச் சேர்ந்த யுரினா நோகுச்சி (Yurina Noguchi) என்ற பெண், ChatGPT மூலம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கதாபாத்திரத்தைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Instamart: ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய சென்னைவாசி; அதிகபட்சமாக ரூ.22 லட்சம்! | Swiggy 2025

வீட்டிற்கு கீழே கடை இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை இப்போது மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு லிட்டர் பால் வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் ஆர்டர் போடும் நிலை ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

மும்பை கட்டடத்தில் நுழைந்து 7 பேரை தாக்கிய சிறுத்தை புலி - பல மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை

மும்பை மத்திய பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் வனப்பகுதி இருக்கிறது. இங்கு சிறுத்தை புலிகள் அதிக அளவில் வசிக்கின்றன. அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்கிய சம்பவங்கள் நடந்த... மேலும் பார்க்க

புல்லட் பாபா: காவல் நிலையத்திலிருந்து மாயமாகும் புல்லட் - கோயில் கட்டி கும்பிடும் மக்கள்!

கோயில்களில் நந்தி, மயில் போன்ற கடவுள்களின் வாகனங்கள் அல்லது கடவுள்களிடம் எப்போதும் இருக்கும் விலங்குகள், பறவைகளுக்கு சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் புல்லட்டிற்கு க... மேலும் பார்க்க

திண்டிவனம்: நெருங்கும் மார்கழி மாதம்; விற்பனைக்கு வந்த கலர்...கலர் கோலமாவு! | Photo Album

விற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல மாவுவிற்பனைக்கு வந்துள்ள கலர் கோல ... மேலும் பார்க்க