செய்திகள் :

6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா

post image

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது.

இந்தச் சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நேற்று (டிச. 25) நடைபெற்றது.

K-4 Missile
K-4 Missile

நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

'K-4' ஏவுகணை

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த 'K-4' ஏவுகணை 12 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. திட எரிபொருளால் இந்த 'கே - 4' ஏவுகணை இயங்கும் என்று கூறப்படுகிறது.

3,500 கி.மீ., துாரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை மூலம் எதிரியின் எல்லையை நெருங்காமலேயே கடலின் ஆழமான பகுதியில் இருந்தபடி அணு ஆயுததத்தாக்குதலை நடத்த முடியும்.

ஐ.என்.எஸ். அரிகாட் (INS Arighat)

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பலையடுத்து, கடற்படையில் இணைந்த இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தான் ஐ.என்.எஸ் அரிகாட்.

இது 6000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ் அரிகாட் அணுசக்தியால் இயங்குகிறது. அரிகாட்(Arighat) என்பது எதிரிகளை அழிப்பவன் என்ற அர்த்தத்தை கொண்டது.

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் பல மாதங்கள் நீருக்கடியில் இருந்து செயல்படும் திறன் கொண்டது.

இந்திய கடற்படை மட்டுமின்றி DRDO, BHEL ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த ஐ.என்.எஸ். அரிகாட் உருவாக்கப்பட்டிருக்கிறது.

K-4 Missile - INS Arighat
K-4 Missile - INS Arighat

இந்த ஐ.என்.எஸ். அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட 'K-4' ஏவுகணை சோதனையின் வெற்றி, இந்திய கடற்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், நிலம், வான் மற்றும் நீருக்கடியில் தளங்களில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது.

மும்பை: "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து" - புறாக்களுக்கு உணவளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம்

மும்பையில் பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு கொடுக்க மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தடை விதித்து இருக்கிறது. பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு போடுவதால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண... மேலும் பார்க்க

Modi: ``அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான்" - பிரதமர் மோடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீன் தயாள் உபாத்யாய் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களைப் போற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 'ராஷ்டிர பிரேர்ணா ... மேலும் பார்க்க

பாமகவில் இருந்து ஜி.கே மணி நீக்கம்; அன்புமணி தரப்பு அதிரடி

பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒ... மேலும் பார்க்க

Nigeria: "கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம்" - ட்ரம்ப்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந... மேலும் பார்க்க