செய்திகள் :

`இரவில் பயத்தில் வாழ்கிறோம்' - ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த 19 மாணவிகள்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்வதாக நிர்வாகத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இரவு நேரத்தில் அதிக அளவில் ராகிங் நடப்பதாக மர்ம புகார் வந்தது.

அந்த புகாரில், முதலாம் ஆண்டு மாணவிகள் கடந்த 20 நாட்களாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். நாங்கள் பயமான சூழ்நிலையில் வசித்து வருகிறோம். இரவில்தான் ராகிங் நடக்கிறது.

Representational Image
Representational Image

இது குறித்து நிர்வாகத்திடம் புகார் செய்தாலும் கண்டுகொள்வதில்லை''என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணையில் பெரும்பாலான முதலாம் ஆண்டு மாணவிகள் ராகிங் தொல்லைக்கு ஆளானதாகவும், அறிமுகம் என்ற பெயரில் இத்துன்புறுத்தல் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

அதோடு இது போன்ற செயலில் ஈடுபட்ட 19 மாணவிகளையும் முதலாம் ஆண்டு மாணவிகள் அடையாளம் காட்டினர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 19 மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த 3 மாதத்திற்கு விடுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கல்லூரி கிளாஸில் பங்கேற்க முடியும். எதிர்காலத்தில் இதுபோன்று நடந்தால் சஸ்பெண்ட், கல்லூரியில் இருந்து நீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள விடுதி நிர்வாகம், மாணவிகளிடம் இதுதொடர்பாக எழுதி வாங்கிக்கொண்டுள்ளது.

இது குறித்து அரசு ஆயுர்வேதக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் ராஜேந்திர சோனேகர் கூறுகையில், "ராகிங் குறித்த தகவல் கிடைத்ததும், நாங்கள் ராகிங் தடுப்புக் குழுவை அமைத்தோம், அதில் ஜூனியர் மற்றும் சீனியர் மாணவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, 19 மாணவிகள் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. அவர்கள் விடுதியிலிருந்து 3 மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளனர். இந்தத் துன்புறுத்தலில், சீனியர்கள் முன் ஜூனியர்கள் தலைகுனிந்து மணிக்கணக்கில் நிற்க வைக்கப்படுகின்றனர். அறிமுகம் என்ற பெயரில் நடக்கும் இச்செயல் மணிக்கணக்கில் நீளும். அதில் உடல்ரீதியான துன்புறுத்தல் எதுவும் இல்லை."என்று தெரிவித்தார்.

மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.இதில் தனக்கு தொடர்பு இல்லை எ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கொடூரமாகத் தாக்கப்படும் வடமாநில இளைஞர்; சர்ச்சையைக் கிளப்பும் வீடியோ; வலுக்கும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் நான்கு சிறுவர்களால் அரிவாள்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மத்தியப் பிரதேசத்த... மேலும் பார்க்க

”வொர்க் ப்ரம் ஹோம்; ஆன்லைன் ரிவ்யூ..” விளம்பரத்தால் இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த “வீட்டிலிருந்த படியே வேலை” என்ற விளம்பரத்தைப் பார்த்து அதை க்ளிக் செய்துள்ளார். உடனே அவருக்கு வாட்ஸ் அப்... மேலும் பார்க்க

மும்பை: "ஆண் குழந்தை இல்லை" - 6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் சிக்கியது எப்படி?

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் கலம்பொலி என்ற இடத்தில் வசிப்பவர் சுனந்தா(30). இவரது கணவர் சாப்ட்வேர் பொறியியலாளராக இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.அச்சிறுமிக்கு ஆரம்பத்தில் இ... மேலும் பார்க்க

`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; வீடியோ ஆதாரத்துடன் புகார்; தலைமறைவான காவலர்

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீஸாரின் அலட்சியம் காரணமாக தற்போது அந்தக் காவலர் தலைமறைவாகி... மேலும் பார்க்க