செய்திகள் :

செங்கல்பட்டு: மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் கர்ப்பம்; சிக்கிய சிறுவன், இளைஞர் - என்ன நடந்தது?!

post image

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர்மல்க இளம்பெண்ணின் அம்மா ஒருவர் வந்தார். அவர், போலீஸாரிடம் `என் மகளை ஏமாற்றி சக்திவேல் என்ற இளைஞரும், 17 வயது சிறுவனும் கர்ப்பமாக்கிவிட்டனர்' எனக் கூறினார். இதையடுத்து சக்திவேலையும் 17 வயது சிறுவனையும் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கிளாம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அந்தப் பெண்ணை வீட்டிலேயே வைத்து அவரின் குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள். இளம்பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், தனியாக இளம்பெண் வீட்டிலிருப்பார். அப்போது இளம்பெண்ணின் ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர், அடிக்கடி அவரிடம் பேசி பழகி வந்திருக்கிறார். அதேபோல 17 வயது சிறுவனும் அந்த இளம்பெண்ணடம் பழகி வந்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை

இந்தநிலையில் இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தைகளைக் கூறிய சக்திவேலும் சிறுவனும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். தனக்கு நடக்கும் கொடுமை என்னவென்று தெரியாமல் அந்த இளம்பெண் இருந்திருக்கிறார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் அந்த இளம்பெண், மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது இளம்பெண், சக்திவேல், 17 வயது சிறுவன் ஆகியோரின் பெயர்களைக் கூறியிருக்கிறார். இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் எங்களிடம் புகாரளித்ததும் சக்திவேல், 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதேபோல பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தியிருக்கிறோம். இளைஞர் சக்திவேல், சிறுவன் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சக்திவேலை சிறையில் அடைத்துள்ளோம். சிறுவனை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

`இரவில் பயத்தில் வாழ்கிறோம்' - ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த 19 மாணவிகள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்வதாக நிர்வாகத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இரவு நேரத்தில... மேலும் பார்க்க

மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.இதில் தனக்கு தொடர்பு இல்லை எ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கொடூரமாகத் தாக்கப்படும் வடமாநில இளைஞர்; சர்ச்சையைக் கிளப்பும் வீடியோ; வலுக்கும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் நான்கு சிறுவர்களால் அரிவாள்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மத்தியப் பிரதேசத்த... மேலும் பார்க்க

”வொர்க் ப்ரம் ஹோம்; ஆன்லைன் ரிவ்யூ..” விளம்பரத்தால் இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த “வீட்டிலிருந்த படியே வேலை” என்ற விளம்பரத்தைப் பார்த்து அதை க்ளிக் செய்துள்ளார். உடனே அவருக்கு வாட்ஸ் அப்... மேலும் பார்க்க

மும்பை: "ஆண் குழந்தை இல்லை" - 6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் சிக்கியது எப்படி?

மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் கலம்பொலி என்ற இடத்தில் வசிப்பவர் சுனந்தா(30). இவரது கணவர் சாப்ட்வேர் பொறியியலாளராக இருக்கிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.அச்சிறுமிக்கு ஆரம்பத்தில் இ... மேலும் பார்க்க

`மலையில் தஞ்சம்' - பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க