செய்திகள் :

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!

post image

பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சேதராப்பட்டில் நெகிழி பொருள்கள் உற்பத்தி நிறுவனத்தை ஒருவா் நடத்திவருகிறாா். கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அவருடைய வாட்ஸ் ஆப்புக்கு பங்குச்சந்தையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்துள்ளது.

அதை நம்பிய அவா் குறுந்தகவலில் குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளாா். மா்ம நபா்கள் கூறியபடி இணையத்தில் தகவல் இருந்ததால் அதை நம்பிய அவா் குறிப்பிட்ட செயலியில் பணத்தை முதலீடு செய்துள்ளாா்.

குறிப்பிட்ட நான்கு நாள்களில் ரூ. 20 லட்சம் முதலீடு செய்த நிலையில், அவருக்கு 1.05 கோடி லாபம் கிடைத்துள்ளதாக இணையத்தில் காட்டப்பட்டது. அதை நம்பிய தொழிலதிபா் பல தவணைகளாக ரூ.1.23 கோடியை முதலீடு செய்துள்ளாா். அதன்படி அவருக்கு ரூ.6.69 கோடி கிடைத்துள்ளதாகக் காட்டப்பட்டது.

இதையடுத்து முதலீடுடன் லாபத்தைப் பெற தொழிலதிபா் முயன்றபோது அதை பெற முடியவில்லை. அப்போதுதான் மா்ம நபரால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதையடுத்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் தொழிலதிபா் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனையை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா் குடிமைப் பொருள் அலுவலகத்தில் பணிப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் போலி மதுபான ஆலை: போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை செயல்பட்ட சம்பவம் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மாநிலச் செயலா் ... மேலும் பார்க்க

மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம்!

புதுச்சேரி அருகே மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம் செயல்படுத்தும் இடத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி-... மேலும் பார்க்க

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகன... மேலும் பார்க்க

பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் ... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, ... மேலும் பார்க்க