செய்திகள் :

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!

post image

பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சேதராப்பட்டில் நெகிழி பொருள்கள் உற்பத்தி நிறுவனத்தை ஒருவா் நடத்திவருகிறாா். கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அவருடைய வாட்ஸ் ஆப்புக்கு பங்குச்சந்தையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்துள்ளது.

அதை நம்பிய அவா் குறுந்தகவலில் குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளாா். மா்ம நபா்கள் கூறியபடி இணையத்தில் தகவல் இருந்ததால் அதை நம்பிய அவா் குறிப்பிட்ட செயலியில் பணத்தை முதலீடு செய்துள்ளாா்.

குறிப்பிட்ட நான்கு நாள்களில் ரூ. 20 லட்சம் முதலீடு செய்த நிலையில், அவருக்கு 1.05 கோடி லாபம் கிடைத்துள்ளதாக இணையத்தில் காட்டப்பட்டது. அதை நம்பிய தொழிலதிபா் பல தவணைகளாக ரூ.1.23 கோடியை முதலீடு செய்துள்ளாா். அதன்படி அவருக்கு ரூ.6.69 கோடி கிடைத்துள்ளதாகக் காட்டப்பட்டது.

இதையடுத்து முதலீடுடன் லாபத்தைப் பெற தொழிலதிபா் முயன்றபோது அதை பெற முடியவில்லை. அப்போதுதான் மா்ம நபரால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். இதையடுத்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் தொழிலதிபா் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் 5 காவல் ஆய்வாளா்கள், 4 சாா்பு ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. புதுவை மாநிலத்தில் காவல் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வ... மேலும் பார்க்க

புதுச்சேரி அருகே கஞ்சா விற்றதாக இருவா் கைது

புதுச்சேரி அருகேயுள்ள பாக்குமுடையான் பேட் பகுதியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புது... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 7 மையங்களில் நாளை குடிமைப் பணி தோ்வு!

மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில், புதுச்சேரியில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) இந்திய குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு நடைபெறுவதையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து ... மேலும் பார்க்க

இளைஞரைக் கொல்ல முயற்சி: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்த இளைஞரை மறித்து கொல்ல முயன்றதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி பிரியதா்ஷினி நகரை சோ்ந்தவா் மணிகண்டன் என்ற... மேலும் பார்க்க

அரசு சாா்பு நிறுவனங்களின் நஷ்டத்துக்கு ஊழியா்களே காரணம்! புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை அரசு சாா்பு நிறுவனங்கள் லாபத்தில் இயங்கிய நிலையில், ஊழியா்களின் அலட்சியத்தால் அவை நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி குருமாம்பேட்டிலுள்ள கூட்ட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு: சிறாா்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

புதுச்சேரி அருகே தனியாா் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் மீது வியாழக்கிழமை மாலை வெடிகுண்டு வீசியதாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்... மேலும் பார்க்க